Love Zodiac Signs Luck: காதல் திருமணம் யாருக்கு வாய்க்கும்.. காதல் கைகூடாத ராசிகள் என்னென்ன? - ஜோதிடர் பேட்டி!
காதல் கைகூடாத ராசிகள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
ஏழரை சனி, அஷ்டமத்து சனி நடக்கும் போது, காதல் பூக்குமாயின் அது தோல்வியில் முடிய வாய்ப்பு இருக்கிறது. அப்படி இல்லையென்றால், அவர்களை நீண்ட வருடங்களாக நினைத்துக்கொண்டே இருக்கும் சூழ்நிலை உருவாகும்.
இந்தக்காலட்டத்தில் கடகம், சிம்மம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கு காதல் பூக்குமாயின், அதன் இறுதி வடிவம் அதிக பட்சமாக தோல்விதான். ஆகையால், காதலிக்கும் போது, ஜாதகத்தை பார்த்து, இரண்டு பேருக்கும் காதல் திருமணம் நடக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதை கணித்து விட்டு காதல் செய்வது நல்லது.
எல்லாவற்றை விடவும் சிறப்பான விஷயம் என்னவென்றால் இவர்கள் காதல் போன்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. காரணம், காதலிக்கும் போது படிப்பு, தொழில் போன்ற விஷயங்களில் அவர்களால் கவனம் செலுத்த முடியாது.
எளிதாக காதல் வயப்படும் ராசிகளாக ரிஷபம், கடகம், துலாம் ஆகிய ராசிகள் உள்ளன. காரணம் என்னவென்றால், சுக்ரன் மற்றும் சந்திரனின் சேர்க்கை இவர்களுக்கு இருக்கும். சுக்ரனும் செவ்வாயும் சேர்ந்து இருக்கும் காதல் உணர்ச்சி அதிகமாக இருக்கும்.
தனுசு ராசி மற்றும் தனுசு லக்னத்தை கொண்டவர்கள் எல்லாவற்றிலும் ஒரு கண்ணியத்தை கடைப்பிடிப்பார்கள் காரணம் அது குருவின் ராசி. அவர்கள் ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டு இருந்தாலும், அவர்களை தொட மாட்டார்கள். ஆனால் அந்தப்பெண்ணின் மீது அளவு கடந்த காதல் வைத்திருப்பார்கள்.
ஆனால் மீனம் அப்படியில்லை. மீனம் குருவின் ராசியாக இருந்த போதிலும், அங்கு சுக்கிரன் உச்சம் பெறுகிறார். ஆகையால், இவர்களிடம் கண்ணியம் இருந்தாலும், தனுசு ராசி போன்று இவர்களுக்கு தயக்க உணர்வு இருக்காது. எதையும் வெளிப்படுத்தி விடுவார்கள்.
நன்றி: ஆம்பூர் வேல்முருகன்!
டாபிக்ஸ்