தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Vakra Peyarchi: வக்ரம் அடையப்போகும் குரு.. விக்கல் வரவைத்துவிடுவார் ஜாக்கிரதை.. விருச்சிக ராசிக்காரர்களே கவனம்!

Guru vakra peyarchi: வக்ரம் அடையப்போகும் குரு.. விக்கல் வரவைத்துவிடுவார் ஜாக்கிரதை.. விருச்சிக ராசிக்காரர்களே கவனம்!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 28, 2023 10:37 AM IST

குரு வக்ரம் அடைவதால் விருச்சிக ராசிக்காரர்கள் அடையப்போகும் சோதனைகளை விளக்குகிறது இந்தக்கட்டுரைத்தொகுப்பு

குரு வக்கிர பெயர்ச்சி
குரு வக்கிர பெயர்ச்சி

வக்ர நிவர்த்தியும் அதே தேதியில் தான் வரும்.  அந்த வகையில் பார்க்கும் பொழுது நான்கு மாதங்கள் குரு பகவான் வக்கிரகதியிலேயே பயணம் செய்ய இருக்கிறார். பொதுவாக குரு பகவானை முழு சுவர் என்று அழைப்பார்கள். குரு பார்வை கோடி நன்மை தரும் என்று கூட சொல்வார்கள். 

குரு உச்சத்தில் இருக்கும் பொழுது அந்த ஜாதகக்காரர் ஒழுக்கமாக நேர்மையாக இருப்பார். குரு வக்ரமடைக்கும் பொழுது அதற்கு நேர்மாறான விஷயங்களில் சோதனைகள் உண்டாகும். இந்த நிலையில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இவர் என்ன மாதிரியான வக்ர சோதனைகளை கொடுக்கப்போகிறார் என்பதை பார்க்கலாம். 

குரு பகவான் இரண்டு ஐந்துக்கு உடையவன். முன்னதாக ஆறாம் இடத்தில் குரு மறைந்து தேவையில்லாத மனச்சிக்கல்கள் பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை உருவாக்கிக் கொண்டிருந்தார். தற்போது அவர் வக்ரம் பெறுவதால் ஓரளவுக்கு ஆறுதல், நன்மைகள் உள்ளிட்டவை கிடைக்க வாய்ப்பு உண்டு. 

இந்த குரு வக்ரத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிச்சயம் இழப்பு உண்டு. அந்த வகையில் பார்க்கும்பொழுது இந்த குரு வக்ரத்தில் விருச்சிகம் மற்றும் விருச்சிக லக்னம் உடையவர்களுக்கு பதவி அந்தஸ்து தடுமாற்றத்தினால் பெயர்,பொருள், திருப்தி கெட வாய்ப்பு இருக்கிறது. 

அதை விளக்க வேண்டும் என்றால் பதவி மற்றும் அந்தஸ்து கிடைக்கிறது என்பதற்காக பெயர், பொருள், திருப்தி உள்ளிட்டவற்றை நீங்கள் கெடுத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. 

காரணம் என்னவென்றால் குரு பகவான் ஆறாம் இடத்தில் இருக்கிறார். அவர் வக்கிரம் பெற்று பத்தாம் இடத்தை பார்க்கிறார். பத்தாம் இடத்தில் நல்ல ஆட்சியாக இருந்த போதிலும், எட்டு மற்றும் 11 க்கு உடையவனோடு சேர்ந்திருக்கிறார். பதினொன்றுக்கு உடையவனான புதன் எதிர்பாராத லாபத்தை கொடுக்கக் கூடியவன். 

ஆனால் புதன் முழுவதுமாக அஸ்தங்கமாக மாறி முழு சக்தியையும் பத்தாம் இடத்திற்கு கொடுத்துவிடுகிறார். அதனால் உங்களுக்கு கிடைக்கும் பதவி, அந்தஸ்து உள்ளிட்டவற்றை பற்றி பிறர் பேசும் பொழுது நீங்கள் அதில் புளங்காயிதம் ஆவதற்கான வாய்ப்பு இருக்கிறது. 

லக்னாதிபதி முழுவதுமாக அஸ்தங்கமாக மாறி வக்ரமும் அடைந்திருக்கிறார். ஆகையால் பணத்தைவிட மரியாதையின் மீதும் பெயர் மீதும் அதிக பிரியம் ஏற்படும். இந்த இடத்தில் பொருள் கெடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. 

ஆறாம் இடத்தில் குருவுடன் ராகுவும் சேர்ந்து இருக்கிறார். ராகுவானவன் சனி பகவான் போல வேலை பார்ப்பார். இந்தக் கட்டத்தில் நீங்கள் குத்துமதிப்பாக வேலை செய்ய வாய்ப்பு இருக்கிறது. அதில் கிடைக்கக்கூடிய பலனுக்கு மற்றவர்களிடமிருந்து நல்ல மரியாதையும் வர வாய்ப்பு இருக்கிறது.

கூடவே உங்களின் ராசி அதிபதியான சந்திரனும் ஆறாம் இடத்தில் இருக்கிறார். அவர் ஆறாம் இடத்தில் இருக்கும் பொழுது புகழ் மரியாதை கெடும் விதமாக சில வேலைகளை நீங்கள் செய்து விடுவீர்கள். ஆறாம் இடத்தில் இருக்கக்கூடிய குருவானவன் 10 மற்றும் 11 ம் இடத்தையும் பார்க்கிறார். ஆகையால் நிம்மதி சந்தோஷம் உள்ளிட்டது கெடுவதற்கான வாய்ப்பு என்பது இருக்கிறது.

இன்னொன்று நான்காம் இடமான சனியும் வக்ரம் பெற்று இருக்கிறார். அதனால் பெயர் அந்தஸின் மீதே உங்களது முழு கவனமும் இருக்கும். பொருளின் மீது கவனம் இருப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும். நன்றாக தியானம் செய்து மனதை பழக்கப்படுத்துங்கள். மனம் சமநிலையில் இருக்கும் பொழுது நம் எதிரில் இருக்கும் விஷயம் என்ன மாதிரியாக இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும் முடியும்

நன்றி: Dr. Arut Kudanthai Aaru Ganesan.

WhatsApp channel

டாபிக்ஸ்