தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Woman Suicide : நம்பிக்கை துரோகம் செய்த கணவர்.. வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்தியதால் விரக்தி.. இளம்பெண் தற்கொலை!

Woman Suicide : நம்பிக்கை துரோகம் செய்த கணவர்.. வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்தியதால் விரக்தி.. இளம்பெண் தற்கொலை!

Divya Sekar HT Tamil

May 16, 2023, 10:31 AM IST

திருவள்ளூர் அருகே கணவர் வேறு பெண்ணு டன் குடும்பம் நடத்தியதால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் அருகே கணவர் வேறு பெண்ணு டன் குடும்பம் நடத்தியதால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் அருகே கணவர் வேறு பெண்ணு டன் குடும்பம் நடத்தியதால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் அருகே ஒண்டிக்குப்பம் வரலட்சுமி நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரசாந்த் (28). இவர், ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே பகுதியில் உள்ள குப்புசாமி நகர், சாய்பாபா கோவில் தெருவை சேர்ந்த பவானி (24) என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Duraimurugan: ’சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளா!’ கள்ளமவுனம் காப்பது ஈபிஎஸ்க்கு கைவந்த கலை! துரைமுருகன்!

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

பிரசாந்த்துக்கு தனது நிறுவனத்தில் பணியாற்றும் வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பவானிக்கும், பிரசாந்துக்கும் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சில நாட்களாக மனைவி மற்றும் குழந்தைகளை மறந்து அப்பெண்ணுடன் பிரசாந்த் குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் மணமுடைந்த பவானி நேற்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக மணவாள நகர் போலீஸ் நிலையத்தில் பவானியின் தாய் உஷா, தனது மகளின் சாவுக்கு காரணமான பிரசாந்த் மற்றும் அவரது பெற்றோர்கள் தருமன்,ரேணுகா உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் செய்தார். இந்த சம்பவம் குறித்து மணவாள நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

அடுத்த செய்தி