தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  விவசாயிகளுக்கு விரைவில் 24 மணி நேரமும் மின்சாரம்-அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

விவசாயிகளுக்கு விரைவில் 24 மணி நேரமும் மின்சாரம்-அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

Manigandan K T HT Tamil

Apr 05, 2023, 11:42 AM IST

Minister Senthil Balaji: “மின் பகிர்மானத்துக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.”
Minister Senthil Balaji: “மின் பகிர்மானத்துக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.”

Minister Senthil Balaji: “மின் பகிர்மானத்துக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.”

விவசாயிகளுக்கு விரைவில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டசபையில் தெரிவித்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Duraimurugan: ’சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளா!’ கள்ளமவுனம் காப்பது ஈபிஎஸ்க்கு கைவந்த கலை! துரைமுருகன்!

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

மின் பகிர்மானத்துக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. பணிகள் முடிந்தவுடன் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:

விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாட்டில் அனைத்து விவசாயிகளுக்கும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையும் என மும்முனை மின்சாரம் முதல்வரின் உத்தரவின்பேரில் வழங்கப்பட்டு வருகிறது.

சிவகங்கை தொகுதியிலும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

பின்னர், சிவகங்கை அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன், சிவகங்கை மாவட்டம் விவசாயத்தை முழுமையாக நம்பி இருக்கிறது. 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று கேள்வி எழுப்பினார்.

அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன்

அதற்கு  அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்பது முதல்வரின் உத்தரவு. அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்தப் பணிகள் நிறைவு பெற்றவுடன் 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் செந்தில் பாலாஜி.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி