தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Cuddalore : உல்லாசம்.. 3 ஆண்டு காதல்.. திருமணம் செய்ய மறுத்த காதலன்.. போராடி கரம்பிடித்த கர்ப்பிணி.. நடந்தது என்ன?

Cuddalore : உல்லாசம்.. 3 ஆண்டு காதல்.. திருமணம் செய்ய மறுத்த காதலன்.. போராடி கரம்பிடித்த கர்ப்பிணி.. நடந்தது என்ன?

Divya Sekar HT Tamil

Jun 13, 2023, 11:42 AM IST

கடலூரில் 3 ஆண்டு காதலித்து கர்ப்பம் ஆக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலனை இளம்பெண் போராடி கரம் பிடித்தார்.
கடலூரில் 3 ஆண்டு காதலித்து கர்ப்பம் ஆக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலனை இளம்பெண் போராடி கரம் பிடித்தார்.

கடலூரில் 3 ஆண்டு காதலித்து கர்ப்பம் ஆக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலனை இளம்பெண் போராடி கரம் பிடித்தார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்துக்கூடல் கிராமத்தில் தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பாக்கியலட்சுமி(23) சென்னையில் இருக்கும் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாக்கியலட்சுமி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பரவலூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Today Gold Rate: வரலாற்றில் புதிய உச்சம்..வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!

இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வினோத் பாக்கியலட்சுமி உடன் தனிமையில் இருந்துள்ளார். தற்போது பாக்கியலட்சுமி 5 மாத கர்ப்பமாக இருக்கிறார். இதனால் பாக்கியலட்சுமி வினோத்திடம் திருமணம் செய்துகொள்வோம் என பலமுறை கேட்டுள்ளார். ஆனாம் வினோத் ஏதாவது சாக்குபோக்கு சொல்லி தட்டிக்கழித்து உள்ளார். ஒருகட்டத்தில் வினோத் திருமணம் செய்து கொள்ளமாட்டேன். கருவை கலைத்து விடு என தெரிவித்துள்ளார். 

இதனால் மனமுடைந்த பாக்கியலட்சுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடர்பாக விருதாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வினோத்தையும், அவரது பெற்றோரையும் அழைத்து நீண்ட நேர பேச்சுவார்த்தை நடத்திய பிறகு வினோத் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து இரு வீட்டு உறவினர்கள் முன்னிலையில் எம்.ஜி.ஆர் நகரில் இருக்கும் ஸ்ரீ வண்ணமுத்து மாரியம்மன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதேபோல கடந்தமாதம் கன்னியாகுமரியிலும் அரங்கேறியது. தன்னை காதலித்து ஏமாற்றிய இளைஞரை, திரைப்பட பாணியில் கரம்பிடித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சி, பிள்ளைத்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் லெனின் கிராஸ் (29). இவர் எஞ்சினியரிங் படித்துள்ளார்.

வாட்சப் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடியை சேர்ந்த ரிமோலின் விண்ணரசிக்கும் ( 24) லெனினுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே, வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த லெனின் விண்ணரசியை நேரில் சந்தித்து இருக்கிறார். இதனையடுத்து, இருவரும் அடிக்கடி வெளியூர் சென்றும் வந்துள்ளனர். அங்கு திருமண வாக்குறுதியின் பேரில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

விடுமுறை முடிந்ததும் வெளிநாட்டுக்கு சென்ற லெனின் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அதற்காக பெண்ணையும் பார்த்து நிச்சயம் செய்ய லெனின் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கும் வந்துள்ளார். அங்கு திருமணம் செய்ய பத்திரிகைகள் விநியோகிக்கப்பட்ட நிலையில், விண்ணரசிக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனால் பதறிப்போன அவர் காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்த தேவாலயத்திற்கு சென்று பாதிரியாரை சந்தித்து விபரத்தை தெரிவித்துள்ளார்.

உண்மையை அறிந்த பாதிரியார் லெனின் கிராஸுக்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தவே, விண்ணரசியும் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அதிகாரிகள் இருதரப்பையும் அழைத்து விசாரணை செய்தனர். இருவரையும் சேர்ந்து வாழ அதிகாரிகள் அறிவுறுத்திய நிலையில், இருவரும் தேவாலயம் முன்பு மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி