தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Murder: மனைவியின் நடத்தையில் சந்தேகம் - அடித்துக்கொண்ட கணவர்

Murder: மனைவியின் நடத்தையில் சந்தேகம் - அடித்துக்கொண்ட கணவர்

Jun 27, 2023, 12:26 PM IST

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்துக்கொண்ட கணவன் நேரடியாகக் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்துக்கொண்ட கணவன் நேரடியாகக் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்துக்கொண்ட கணவன் நேரடியாகக் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இந்தியாவில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இது குறித்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. குற்றங்களுக்காக பல்வேறு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டாலும் தொடர்ந்து குற்றங்கள் குறையா வண்ணம் நடந்து வருகின்றன.

ட்ரெண்டிங் செய்திகள்

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Today Gold Rate: வரலாற்றில் புதிய உச்சம்..வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!

Weather Update: மிரட்ட காத்திருக்கும் கனமழை..இந்த 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

திருமணத்தை மீறிய உறவுகள், சிறுமி பாலியல் வன்கொடுமை, இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடூரங்கள் எனக்குக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அப்படி ஒரு சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மேல சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்தவர் 50 வயதான மாரியப்பன். இவரது மனைவி 45 வயதான மாரியம்மா. இவர் தினமும் ஆடு மேய்ச்சலுக்காக வெளியே சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

காலையில் ஆடு மேய்ச்சலுக்காகச் சென்று விட்டோம் மாலையில் வீடு திரும்புவதை இவர் வழக்கமாக வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவருக்குத் தினமும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. தினமும் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

தினமும் இந்த தம்பதிக்கிடையே தகராறு நடைபெற்று வந்துள்ளது. நேற்று மாரியம்மாளோடு சேர்ந்து ஆடு மேய்ச்சலுக்கு சென்றுள்ளார். அப்போது தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த மாரியப்பன் அருகில் இருந்த கம்பியை எடுத்து சரமாரியாக அவரது மனைவி மாரியம்மாளைத் தாக்கி உள்ளார்.

படுக்காயம் அடைந்து மயங்கி விழுந்த மாரியம்மன் கண்டு அவரது கணவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இது குறித்து ஒட்டப்பிடாரம் காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மாரியம்மாளை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மாரியம்மாளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் மாரியம்மாளின் கணவர் இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். தற்போது ஓட்டப்பிடாரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப தகராறு காரணமாக மனைவியைத் தாக்கிய சம்பவத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி