தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Aadhar With Eb Connection: மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்க சிறப்பு முகாம்!

Aadhar with EB connection: மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்க சிறப்பு முகாம்!

Divya Sekar HT Tamil

Nov 27, 2022, 06:49 AM IST

மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்காக வருகிற 28ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்காக வருகிற 28ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்காக வருகிற 28ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்காக வருகிற 28ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

ட்ரெண்டிங் செய்திகள்

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் பெலிக்ஸ்க்கு வரும் மே 31 வரை நீதிமன்ற காவல்!’ கோவை நீதிமன்றம் உத்தரவு

Savukku Shankar: ’கை உடைந்த சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு!’ நீதி விசாரணை கேட்கும் அரசியல் செயற்பாட்டாளர்கள் கண்டனம்!

Weather Update: ‘3 மாவட்டங்களில் ரெட் அலார்ட்! 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை’ சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Today Gold Rate : சூப்பர்.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை குறைந்தது.. சவரனுக்கு ரூ.200 சரிவு!

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”தமிழகத்தில் இருக்கக்கூடிய 2,811 பிரிவு அலுவலகங்களிலும் வருகின்ற 28ஆம் தேதி, அதாவது திங்கள்கிழமை முதல் வரும் 31ஆம் தேதி டிசம்பர் மாதம் இறுதி வரை சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

பண்டிகை தினங்களை தவிர்த்து ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10:30 மணி முதல் மாலை 5 : 15 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் செயல்படும். பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களுடைய மின் இணைப்பு எண் மற்றும் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் பல இடங்களில் மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத நிலை இருக்கக்கூடிய நிலையில், டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய மின் கட்டணத்தினை எந்தவிதமான சிரமமும் இல்லாமல் செலுத்திக்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள சிறப்பு முகாமை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி