தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Salem Massage Centers : மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்.. மீட்கப்பட்ட 8 பெண்கள்!

Salem Massage Centers : மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்.. மீட்கப்பட்ட 8 பெண்கள்!

Divya Sekar HT Tamil

Feb 03, 2023, 12:13 PM IST

சேலத்தில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் : இன்றய காலக்கட்டத்தில் மசாஜ் சென்டர் என்பது அதிகமாகியுள்ளது. அனைவரும் வேலை பழு காரணமாக உடல் சோர்வை போக்கி கொள்வதற்கு மசாஜ் சென்டர் செல்கின்றனர். ஆனால் இதையே பலர் தவறாக பயன்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. மசாஜ் சென்டர் என்ற பெயரில் வெளி மாநில பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட வைக்கின்றனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை!

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் ரெட்பிக்ஸ் பெலிக்சை துரத்தும் சோகம்!’ சொந்த ஊரில் ரெய்டு செய்யும் போலீஸ்!

Savukku Shankar Case: ’போலீஸ் துன்புறுத்தவில்லை’ சவுக்கு சங்கர் நீதிபதியிடம் பரபரப்பு பதில்! மே 28 வரை காவல் நீட்டிப்பு

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் பெலிக்ஸ்க்கு வரும் மே 31 வரை நீதிமன்ற காவல்!’ கோவை நீதிமன்றம் உத்தரவு

தற்போது இதேபோல ஒரு சம்பவம் தான் சேலத்தில் நடந்துள்ளது. சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக அழகாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பிற மாநிலங்களை சேர்ந்த பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து மசாஜ் சென்டர் உரிமையாளரான சூரமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (29), பாலக்கோடு பகுதியை சேர்ந்த அருள் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த 2 பெண்களை போலீசார் மீட்டனர்.

இதேபோல் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு மசாஜ் சென்டரிலும் பாலியல் தொழில் நடந்தது போலீஸ் சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அதன் உரிமையாளரான அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த சதீஷ்குமார் (30) மற்றும் வரவேற்பாளராக பணியாற்றிய ஈரோட்டை சேர்ந்த ஒரு பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து 4 பெண்களை போலீசார் மீட்டனர்.

கடந்த வாரம் இதே போல சிவகங்கை மாவட்டத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. காரைக்குடியில் செயல்படும் மசாஜ் சென்டர்களில் விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாள் ஸ்டாலின் உத்தரவின்பேரில் காரைக்குடி பகுதியில் உள்ள மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

கல்லூரி சாலையில் உள்ள மசாஜ் சென்டரில் போலீசார் ஆய்வு செய்தபோது அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது. விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை மீட்டனர். இதேபோல் காரைக்குடி பெரியார் சிலை அருகே உள்ள மசாஜ் சென்டரிலும் விபசாரத்திலும் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை போலீசார் மீட்டனர்.

இதையடுத்து 2 மசாஜ் சென்டர்களின் உரிமையாளர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போன்களை போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளனர். அதில் முக்கிய பிரமுகர்களின் செல்போன் எண்கள் இருப்பதாக தெரிகிறது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி