தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: ஆட்சியர் நலம் விசாரிப்பு

மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: ஆட்சியர் நலம் விசாரிப்பு

Karthikeyan S HT Tamil

Aug 22, 2023, 10:55 AM IST

நாகப்பட்டினம் தலைமை அரசு மருத்துவமனையில் இலங்கை கடற்கொள்ளையர்களால் படுகாயமடைந்த மீனவர்களை நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ், நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான கெளதமன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்
நாகப்பட்டினம் தலைமை அரசு மருத்துவமனையில் இலங்கை கடற்கொள்ளையர்களால் படுகாயமடைந்த மீனவர்களை நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ், நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான கெளதமன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

நாகப்பட்டினம் தலைமை அரசு மருத்துவமனையில் இலங்கை கடற்கொள்ளையர்களால் படுகாயமடைந்த மீனவர்களை நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ், நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான கெளதமன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான விசைப் படகில் 4 மீனவர்களும், செந்தில்அரசன் என்பவருடைய பைபர் படகில் 3 மீனவர்களும், சிவபாலன் என்பவருடைய பைபர் படகில் 4 மீனவர்களும் நேற்று ஆறுகாட்டுத்துறையிலிருந்து மீன்பிடிக்கச் சென்றனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

மீனவர்கள் ஆறுகாட்டுத்துறையிலிருந்து கிழக்கே 19 நாட்டிகல் மைல் தொலைவில் இரவு மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த மூன்று படகுகளில் இலங்கையைச் சேர்ந்த 9 கடற்கொள்ளையர்கள் வீச்சருவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மீனவர்களின் படகுகளில் ஏறி மீனவர்களை தாக்கினர்.

பாஸ்கர் படகிலிருந்து செல்போன் ஜிபிஎஸ் கருவி, டார்ச்லைட் மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றையும், செந்தில்அரசன் படகிலிருந்து செல்போன் ஜிபிஎஸ் கருவி, டார்ச்லைட் 700 கிலோ வலை ஆகியவற்றையும் சிவபாலன் படகிலிருந்து ஜிபிஎஸ் கருவி, டார்ச்லைட் என மொத்தம் ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டி அடித்தனர். இதையடுத்து காயமடைந்த மீனவர்கள் பொருட்களை பறிகொடுத்த நிலையில் அதிகாலை 2 மணியளவில் ஆறுகாட்டுத்துறை கரை திரும்பினர். 

இலங்கை கடற்கொள்ளையர்கள் வீச்சு அரிவாள் கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியதில் தலையில் காயமடைந்த பாஸ்கர், அருள்ராஜ் ஆகியோர் நாகை அரசு மருத்துவமனையிலும் சவுக்குமரக் கட்டையால் தாக்கியதில் காயமடைந்த செந்தில்அரசன், மருது, வினோத், வெற்றிவேல் உள்ளிட்ட மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நாகப்பட்டினம் தலைமை அரசு மருத்துவமனையில் இலங்கை கடற்கொள்ளையர்களால் படுகாயமடைந்த மீனவர்களை நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ், நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான கெளதமன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி