தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  எடப்பாடியின் இந்த ஆசை மட்டும் நிறைவேறாது – எதைச் சொல்கிறார் கே.என்.நேரு?

எடப்பாடியின் இந்த ஆசை மட்டும் நிறைவேறாது – எதைச் சொல்கிறார் கே.என்.நேரு?

Priyadarshini R HT Tamil

Apr 04, 2023, 11:09 AM IST

Minister KN Nehru : சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரவேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமி உடைய ஆசையாக இருக்கிறது. ஆனால் அது ஒரு போதும் நிறைவேறாது. சிறப்பான ஆட்சியை முதல்வர் வழங்கி வருகிறார். எனவே, சரியாக சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற தேதியில் தான் சட்டமன்ற தேர்தல் நடக்கும்
Minister KN Nehru : சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரவேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமி உடைய ஆசையாக இருக்கிறது. ஆனால் அது ஒரு போதும் நிறைவேறாது. சிறப்பான ஆட்சியை முதல்வர் வழங்கி வருகிறார். எனவே, சரியாக சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற தேதியில் தான் சட்டமன்ற தேர்தல் நடக்கும்

Minister KN Nehru : சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரவேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமி உடைய ஆசையாக இருக்கிறது. ஆனால் அது ஒரு போதும் நிறைவேறாது. சிறப்பான ஆட்சியை முதல்வர் வழங்கி வருகிறார். எனவே, சரியாக சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற தேதியில் தான் சட்டமன்ற தேர்தல் நடக்கும்

அமைச்சர் கே.என்.நேரு,திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூ.29 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளமின் தூக்கி, ரூ.47 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள திரவ பிராண வாயு கொள்கலன்மற்றும் ரூ.1.23 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி நோய் எதிர்ப்பு குருதிபகுப்பாய்வு இயந்திரங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று தொடங்கி வைத்தார். 

ட்ரெண்டிங் செய்திகள்

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சென்னை உட்பட வார்டுகள் மறுவரையறை செய்யப்படும் பணிகள் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பின் துவங்கும். ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சருடன் ஆலோசித்து, அதற்காக ஒரு கமிட்டி அமைத்து யாருக்கும் பாதிப்பு இல்லாத வண்ணம் வார்டுகள் மறுவரையறை செய்யப்படும். 

சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரவேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமி உடைய ஆசையாக இருக்கிறது. ஆனால் அது ஒரு போதும் நிறைவேறாது. சிறப்பான ஆட்சியை முதல்வர் வழங்கி வருகிறார். எனவே, சரியாக சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற தேதியில் தான் சட்டமன்ற தேர்தல் நடக்கும் 

திமுக ஆட்சியில் திருச்சி புறக்கணிக்கப்படவில்லை. மற்ற மாவட்டங்கள் பொறாமைப்படும் அளவிற்கு திருச்சிக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் கொடுத்திருக்கிறார். பத்திரிக்கைகள் தான் இப்படி ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றன. திருச்சியை முதல்வர் நேசிப்பவராக இருக்கிறார். 

அதிமுக கூட்டணி குறித்தோ அரசியல் தொடர்பான கேள்விகள் குறித்தோ நான் பதிலளிக்க மாட்டேன். திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தான் பதில் அளிப்பார்.

மெட்ரோ ரயில் திட்ட ஆய்வு பணிக்காக திருச்சியில் பறக்கும் சாலை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ஆய்வு பணிகள் முடிந்த பின்பு உயர்மட்ட சாலை பணிகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும்.

திருச்சியில் புதிய காவிரி பால பணிகள் அமைப்பதற்கு மத்திய அரசு அலுவலகம் ஒன்றை அகற்ற வேண்டி உள்ளது. அது அகற்றப்பட்டு பின்பு பால பணிகள் தொடங்கும். இவ்வாறு நேரு பேட்டியில் தெரிவித்தார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி