தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Cauvery: ’காவிரி விவகாரத்தில் எந்த அரசும் இவ்வளவு முரண்டுபிடித்து இல்லை’ காங்கிரஸ் அரசு மீது துரைமுருகன் காட்டம்!

Cauvery: ’காவிரி விவகாரத்தில் எந்த அரசும் இவ்வளவு முரண்டுபிடித்து இல்லை’ காங்கிரஸ் அரசு மீது துரைமுருகன் காட்டம்!

Kathiravan V HT Tamil

Oct 31, 2023, 12:24 PM IST

”வரும் 3ஆம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் தண்ணீர் தர கோரி வலியுறுத்துவோம். இதில் மத்திய அரசு அதிகாரிகள் சற்று மெத்தனம் காட்டுகிறார்கள் என கூறினார்”
”வரும் 3ஆம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் தண்ணீர் தர கோரி வலியுறுத்துவோம். இதில் மத்திய அரசு அதிகாரிகள் சற்று மெத்தனம் காட்டுகிறார்கள் என கூறினார்”

”வரும் 3ஆம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் தண்ணீர் தர கோரி வலியுறுத்துவோம். இதில் மத்திய அரசு அதிகாரிகள் சற்று மெத்தனம் காட்டுகிறார்கள் என கூறினார்”

காவிரி ஆற்றில் இருந்து விநாடிக்கு 2600 கன அடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த நிலையில் கர்நாடகா தண்ணீர் திறக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Duraimurugan: ’சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளா!’ கள்ளமவுனம் காப்பது ஈபிஎஸ்க்கு கைவந்த கலை! துரைமுருகன்!

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஒழுங்காக ஆற்றவில்லை. நாங்கள் நாள் ஒன்றுக்கு 13 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று கேட்டோம். ஆனால் காவிரி ஒழுங்காற்றுக் குழு வெறும் 2600 கன அடி தண்ணீரை மட்டுமே திறந்துவிடுவோம் என்று சொல்லி உள்ளார்கள்.

இது போதாது என்பதுதான் எங்கள் கருத்து. காவிரி மேலாண்மை வாரியம் வரும் 3ஆம் தேதி கூடுகிறது. அவர்களிடம் இந்த பிரச்னையை எடுத்து செல்வோம். அங்கும் தீர்வு கிடைக்காவிட்டால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்.

கடந்த 1-6-2023 முதல் 26-10-2023 வரை கர்நாடக தமிழ்நாட்டுக்கு 140 டிஎம்சி தண்ணீரை தந்து இருக்க வேண்டும். ஆனால் வெறும் 56.4 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கொடுத்துள்ளனர். இன்னும் 83.6 டிஎம்சி தண்ணீர் வர வேண்டி உள்ளது.

நவம்பரில் தர வேண்டிய 16.44 டிஎம்சி தண்ணீரையும் கர்நாடகா இன்னும் தரவில்லை. இதுவரையில் இருந்து எந்த அரசும் இவ்வுளவு முரண்பிடித்தது இல்லை. ஏதோ எதிரிநாட்டுடன் மோதுவதுபோல் முரண்பிடிக்கிறார்கள்.

ஏதோ சலுகை கேட்பதாக கருதுகிறார்கள். இந்த நாட்டின் உச்சநீதிமன்றம் விதித்த விதிப்படிதான் நாட்டு மக்கள் நடக்கவேண்டும். ஆனால் அரசே அப்படி நடக்கமாட்டேன் என்று சொல்வது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல.

20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த துறையை நான் பார்த்துள்ளேன். கர்நாடகாவில் 10க்கும் மேற்பட்ட முதலமைச்சர்கள், அமைச்சர்களை நான் பார்த்துள்ளேன். சித்தராமையா அவர்கள் முதலமைச்சராக உள்ளார். எனக்கும் தலைவருக்கும் வேண்டியவர், நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமாரும் எனக்கு வேண்டியவர்தான். ஆனால் அவர்கள் இவ்வுளவு பிடிவாதமாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. வரும் 3ஆம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் தண்ணீர் தர கோரி வலியுறுத்துவோம். இதில் மத்திய அரசு அதிகாரிகள் சற்று மெத்தனம் காட்டுகிறார்கள் என கூறினார்

ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் ஆளுநர் அரசியல் செய்கிறாரா என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த துரைமுருகன், இது ஒரு ஜனநாயக நாடு; இந்த நாட்டுக்கென்று அரசியல் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பெரியவர்களாக இருக்கும் காரணத்தாலேயே அரசியல் சட்டப்படி நடக்கமாட்டேன் என்று சொல்வது தவறானது. பெரிய பொறுப்பில் இருப்பவர்களே சட்டத்தை மதிக்கமாட்டேன் என்று சொன்னால் எப்படி மற்றவர்கள் சட்டத்தை மதிப்பார்கள் என கூறினார்.

அடுத்த செய்தி