தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Job Opportunities : சிறையில் சமையலர், தூய்மையாளர் பணி; ரேஷன் கடைகளில் விற்பனையாளர் வேலை – விண்ணப்பிக்க அழைப்பு

Job Opportunities : சிறையில் சமையலர், தூய்மையாளர் பணி; ரேஷன் கடைகளில் விற்பனையாளர் வேலை – விண்ணப்பிக்க அழைப்பு

Priyadarshini R HT Tamil

Jun 12, 2023, 12:06 PM IST

Job Opportunities : ஒரே செய்தியில் இரண்டு வேலைவாய்ப்பு தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. விவரங்களை உள்ளே சென்று படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
Job Opportunities : ஒரே செய்தியில் இரண்டு வேலைவாய்ப்பு தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. விவரங்களை உள்ளே சென்று படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Job Opportunities : ஒரே செய்தியில் இரண்டு வேலைவாய்ப்பு தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. விவரங்களை உள்ளே சென்று படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

ரேஷன் கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை நிரப்ப அரசு புதிய உத்தரவு

ட்ரெண்டிங் செய்திகள்

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள், கட்டுநர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரும் உத்தரவை அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது.

இதற்கான உத்தரவை கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலர் ஜகன்னாதன் பிறப்பித்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு - தமிழ்நாடு கூட்டுறவு சங்க விதிகளின் கீழ், பொது விநியோக திட்டமுறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இது, ரேஷன் கடைகளை நடத்தும் பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும். ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள், கட்டுநர்கள் ஆகியோரைத் தேர்வு செய்யும் நடைமுறைகளும் கூட்டுறவு சங்க விதிகளுக்கு உட்பட்டே செய்யப்படுகின்றன.

அதன்படி, விற்பனையாளர்கள், கட்டுநர்கள் பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோர விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் வெளியான நாளிலிருந்து ஓராண்டு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியலை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். இதற்காக ஆள்சேர்ப்பு நடைமுறை, கடந்த ஆண்டு அக்டோபர் 13ம் தேதி தொடங்கியது.

ஆனாலும், ஆள்சேர்ப்புக்கான உத்தரவு கடந்த ஏப்ரல் 10ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்ததாகக் கருதப்படும். இதற்கான அனுமதியை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளைச் சிறையில் தூய்மையாளர், சமையலர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

வேலூர் மத்திய சிறையின் கட்டுப்பாட்டில் உள்ள கிளைச் சிறையில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளர், சமையலர் பணியிடங்களுக்கு தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது -

வேலூர் மத்திய சிறையின் கட்டுப்பாட்டில் உள்ள கிளைச் சிறையில் காலியாக உள்ள 3 தூய்மைப் பணியாளர் பணியிடம், சமையலர் பணியிடம் ஆகியவற்றுக்கு தகுதியுடையோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், தூய்மைப் பணியாளர் பதவிக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்கவும், சமையலர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவும், இரு ஆண்டுகள் முன் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 37, இதர வகுப்பினருக்கு 34 ஆகும்.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், முன்னுரிமைக்கான சான்றிதழ், உரிய கல்வி இதர சான்றிதழ்களுடன் ரூ.30க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய உறை ஒன்றை இணைத்து சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை, வேலூர்- 02 என்ற முகவரிக்கு வரும் 15ம் தேதிக்குள் தபாலில் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி