தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Erode Bypolls:’அரசின் கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம்’- பாஜக Mla சரஸ்வதி காட்டம்!

Erode Bypolls:’அரசின் கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம்’- பாஜக MLA சரஸ்வதி காட்டம்!

Feb 27, 2023, 12:29 PM IST

மாநில அரசின் கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம் இருப்பதாக பாஜக எம்.எல்.ஏ சிகே சரஸ்வதி குற்றம் சாட்டி இருக்கிறார்
மாநில அரசின் கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம் இருப்பதாக பாஜக எம்.எல்.ஏ சிகே சரஸ்வதி குற்றம் சாட்டி இருக்கிறார்

மாநில அரசின் கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம் இருப்பதாக பாஜக எம்.எல்.ஏ சிகே சரஸ்வதி குற்றம் சாட்டி இருக்கிறார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும் நிலையில்,பாஜக மொடக்குறிச்சி எம்எல்ஏ டாக்டர் சி கே சரஸ்வதி சிஎஸ்ஐ பெண்கள் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில்  இன்று வாக்களித்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் ரெட்பிக்ஸ் பெலிக்சை துரத்தும் சோகம்!’ சொந்த ஊரில் ரெய்டு செய்யும் போலீஸ்!

Savukku Shankar Case: ’போலீஸ் துன்புறுத்தவில்லை’ சவுக்கு சங்கர் நீதிபதியிடம் பரபரப்பு பதில்! மே 28 வரை காவல் நீட்டிப்பு

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் பெலிக்ஸ்க்கு வரும் மே 31 வரை நீதிமன்ற காவல்!’ கோவை நீதிமன்றம் உத்தரவு

Savukku Shankar: ’கை உடைந்த சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு!’ நீதி விசாரணை கேட்கும் அரசியல் செயற்பாட்டாளர்கள் கண்டனம்!

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது, “ இந்த இடைத்தேர்தலில் ஏராளமான பணம் பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதாக பல்வேறு புகார்கள் உள்ளன. எனவே எந்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அது பணநாயகத்தின் வெற்றியாகும். பணத்தை கொடுத்து வாக்காளர்களை கவரும் நிலை மாற்றப்பட வேண்டும்.

இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திருமங்கலம் ஃபார்முலா போல, ஈரோடு கிழக்கு பார்முலா உருவாக்கப்பட்டதாக மக்களும் பேசிக் கொள்கின்றனர்; மக்களை தேர்தல் பணிமனையில் அடைத்து வைத்து பணம், உணவு விநியோகித்ததாக மக்களே பேசுகின்றனர். எனவே வாக்காளர்கள் பணம் வாங்க மறுக்க வேண்டும். முறைகேடுகளை தடுக்க முன்வர வேண்டும்.

அப்போதுதான் ஜனநாயகம் பெருமை அடையும். வாக்களிக்கும் போது வாக்காளர்கள் விரலில் வைக்கப்படும் மையை அழிக்க ஸ்பிரிட் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இக் குறைபாடுகளை எல்லாம் சரி செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பு. ஆனால் தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் அது உள்ளது அதனால் தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் குறித்து பல புகார்கள் கூறியும் அது முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்” என்று அவர் பேசினார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி