தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சென்னையில் அதிர்ச்சி.. பரோட்டா சாப்பிட்டு ஜூஸ் குடித்த இளைஞர் பலி..!

சென்னையில் அதிர்ச்சி.. பரோட்டா சாப்பிட்டு ஜூஸ் குடித்த இளைஞர் பலி..!

Divya Sekar HT Tamil

Jan 30, 2023, 01:37 PM IST

chennai parrota : சென்னையில் ரோட்டு கடையில் பரோட்டோ சாப்பிட்டு, ஜூஸ் குடித்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
chennai parrota : சென்னையில் ரோட்டு கடையில் பரோட்டோ சாப்பிட்டு, ஜூஸ் குடித்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

chennai parrota : சென்னையில் ரோட்டு கடையில் பரோட்டோ சாப்பிட்டு, ஜூஸ் குடித்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை : சென்னை : சமீப காலமாக உணவகங்களில் உணவு சாப்பிட்டு உயிர் இழப்புகள் நிகழ்வதாக அன்றாட செய்திகளில் நாம் பார்க்கிறோம். சில உணவகங்களில் ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி இருப்பதாகவும், சில குப்பைகள் கலந்து வருவதாகவும், புழு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் கூட கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்தார். 

ட்ரெண்டிங் செய்திகள்

மக்களே.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்காம்!

Savukku Shankar: ‘சவுக்கு சங்கரின் சர்ச்சை பேச்சு!’ மன்னிப்பு கேட்டது ரெட்பிக்ஸ் நிறுவனம்!

Weather Update: ’கன்னியாகுமரி முதல் நீலகிரி வரை!’ தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் மழை! வானிலை மையம் எச்சரிக்கை!

Savukku Shankar: ’கண்ணத்தில் அறைந்து கையை முறுக்கினர்! பெண் காவலர்கள் மீது யூடியூபர் சவுக்கு சங்கர் புகார்!

இப்படி இருக்கையில் சென்னையில் பரோட்டா சாப்பிட்டு, ஜூஸ் குடித்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடி, எஸ். ஏ. காலனி, 2ஆவது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் கார்த்திக் (27). இவர் கொளத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் கார்த்திக் நேற்று இரவு 10 மணியளவில் வியாசர்பாடி பகுதியில் உள்ள சாலை ஓர கடையில் பரோட்டா வாங்கி வந்து குடும்பத்தில் உள்ள அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கி உள்ளனர்.

இரவு 11 மணி அளவில் கார்த்திக்கு குமட்டல் மற்றும் வாந்தி வந்துள்ளது. உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடல்நிலை மோசமாக உள்ளது என்று கூறி மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார்த்திக்கின் உறவினர்கள் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

செல்லும் வழியிலேயே கார்த்திக் மயக்கம் அடைந்தார். ஸ்டான்லி மருத்துவமனையில் கார்த்திக்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடை ந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். நேற்று இரவு பரோட்டா சாப்பிட்டு விட்டு அதன் பிறகு கார்த்திக் ஜூஸ் ஒன்றை குடித்துள்ளார். அதன் பிறகு வேறு எதுவும் சாப்பிடவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் குடும்பத்தில் உள்ள அனைவரும் பரோட்டா சாப்பிட்டு விட்டு உறங்கிய நிலையில் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. ஆனால் கார்த்திக் மட்டும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக எம்.கே பி நகர் போலீசார் வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் கார்த்திக் உயிரிழப்புக்கான முழுமையான காரணம் தெரிய வரும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி