தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dindigul Girl Died : ஒன்றறை வயது பெண் குழந்தை கிணற்றில் சடலமாக மீட்பு!

Dindigul girl died : ஒன்றறை வயது பெண் குழந்தை கிணற்றில் சடலமாக மீட்பு!

Divya Sekar HT Tamil

Nov 27, 2022, 06:37 AM IST

திண்டுக்கல் அருகே ஒன்றறை வயது பெண் குழந்தை கிணற்றில் சடலமாக மீட்க்கப்பட்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே ஒன்றறை வயது பெண் குழந்தை கிணற்றில் சடலமாக மீட்க்கப்பட்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் அருகே ஒன்றறை வயது பெண் குழந்தை கிணற்றில் சடலமாக மீட்க்கப்பட்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல்: எரியோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜதுரை - துர்கா தேவி தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றறை வயதுடைய ரத்திகா என்ற பெண் குழந்தை உள்ளது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக துர்கா தேவி, தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Duraimurugan: ’சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளா!’ கள்ளமவுனம் காப்பது ஈபிஎஸ்க்கு கைவந்த கலை! துரைமுருகன்!

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

இந்நிலையில், நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டியில் வசிக்கும் தனது மாமா பாலு வேலை செய்யும் தோட்டத்தில் இரண்டு நாட்களாக தங்கி உள்ளார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று காணாமல் போய்யுள்ளனர். எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.

இந்நிலையில், வீட்டின் அருகே உள்ள கிணற்றில் ரத்திகா உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். பின்னர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த நிலக்கோட்டை தீயணைப்பு படையினர் குழந்தையை சடலமாக மீட்டனர்.

குழந்தை எப்படி கிணற்றில் விழுந்தது? கொலையா இல்லை தண்ணீரில் மூழ்கி இறந்ததா? என்ற பல்வேறு கோணத்தில் நிலக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி