தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Kerala Crime: கேரளாவில் அமெரிக்கப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை..!

Kerala Crime: கேரளாவில் அமெரிக்கப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை..!

Aug 03, 2023, 06:44 AM IST

கேரளாவில் அமெரிக்கப் பெண்ணை கூட்டுப்பாளிகள் வன்கொடுமை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரளாவில் அமெரிக்கப் பெண்ணை கூட்டுப்பாளிகள் வன்கொடுமை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

கேரளாவில் அமெரிக்கப் பெண்ணை கூட்டுப்பாளிகள் வன்கொடுமை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சிறுமிகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். கடுமையான தண்டனைகள் இருந்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.

ட்ரெண்டிங் செய்திகள்

Modi vs Rahul Gandhi: ‘நான் எழுதி தர்றேன்! மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார்!’ ரேபரேலியில் ராகுல் காந்தி பேச்சு!

Prashant Kishore: ’பாஜகதான் ஆட்சி அமைக்கும்! மோடியை வீழ்த்தனும்னா இதை பண்ணுங்க!’ பிரசாந்த் கிஷோர் பேட்டி

Election 2024: ’இத்தாலி நாட்டின் சோனியா காந்தியை போல் மோடி இந்தி தெரியாதவர் அல்ல!’ பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கிண்டல்!

Fact Check : YSRCP வாக்கெடுப்பில் 100% வெற்றி பெறும்’ என சந்திரபாபு நாயுடு கூறினாரா? வைரலாகும் வீடியோ.. நடந்தது என்ன?

வாழ்வில் வன்கொடுமை செய்த பிறகு அந்த பெண்களைக் கொடூரமாகக் கொலை செய்யும் சம்பவங்கள் இன்னும் வேதனை ஏற்படுத்துகின்றது. தற்போது நம் நாட்டுக்குச் சுற்றுலாப் பயணிகளாக வரக்கூடிய வெளிநாட்டுப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது இன்னும் வேதனையை ஏற்படுத்துகிறது.

அப்படி ஒரு சம்பவம் கேரளா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. கேரளாவில் அமெரிக்கப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலத்தில் 44 வயது கொண்ட அமெரிக்கா பெண் ஒருவர் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கியிருந்தார். அந்த ஆசிரமத்திற்கு அருகே உள்ள கடற்கரையில் ஜூலை 31ம் தேதி அன்று தனியாக இருந்துள்ளார்.

கடற்கரைக்கு வந்த இரண்டு பேர் அவருக்கு மதுபானம் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் போதையில் இருந்த அந்த பெண்ணை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று அந்த இரண்டு பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அன்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த குற்றத்தில் ஈடுபட்டுக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரையும் காவல்துறையினர் நேற்று அதாவது ஆகஸ்ட் 2ஆம் தேதி அன்று கைது செய்தனர்.

அந்த இரண்டு பேர் மீதும் இந்தியத் தண்டனை இயல் சட்டத்தின் 376d, 376 (2) (n) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்கப் பெண்ணை இரண்டு பேர் மது கொடுத்துக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கேரளா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

https://twitter.com/httamilnews

 

https://www.facebook.com/HTTamilNews

 

https://www.youtube.com/@httamil

 

Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்

அடுத்த செய்தி