தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  கணவர் திருமணநாள் வாழ்த்து சொல்லலையாம்..அதுக்குனு இப்படியா-மனைவியின் கொடூர செயல்!

கணவர் திருமணநாள் வாழ்த்து சொல்லலையாம்..அதுக்குனு இப்படியா-மனைவியின் கொடூர செயல்!

Divya Sekar HT Tamil

Feb 27, 2023, 12:13 PM IST

திருமண நாளில் வாழ்த்து சொல்ல மறந்த கணவரை மனைவி குடும்பத்தினருடன் சேர்ந்து சரமாரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமண நாளில் வாழ்த்து சொல்ல மறந்த கணவரை மனைவி குடும்பத்தினருடன் சேர்ந்து சரமாரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமண நாளில் வாழ்த்து சொல்ல மறந்த கணவரை மனைவி குடும்பத்தினருடன் சேர்ந்து சரமாரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் வசித்து வருபவர் விஷால். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்பனா என்பவருக்கும் இடையே கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி திருமணம் நடந்தது. 2019ஆம் ஆண்டு விஷால் தனது முதல் திருமண நாளை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளார்.ஆனால் அடுத்தடுத்த திருமண நாள்களை அவர் முதல் திருமண நாள் அளவுக்கு கொண்டாடவில்லை எனக் கூறப்படுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Prashant Kishore: ’பாஜகதான் ஆட்சி அமைக்கும்! மோடியை வீழ்த்தனும்னா இதை பண்ணுங்க!’ பிரசாந்த் கிஷோர் பேட்டி

Election 2024: ’இத்தாலி நாட்டின் சோனியா காந்தியை போல் மோடி இந்தி தெரியாதவர் அல்ல!’ பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கிண்டல்!

Fact Check : YSRCP வாக்கெடுப்பில் 100% வெற்றி பெறும்’ என சந்திரபாபு நாயுடு கூறினாரா? வைரலாகும் வீடியோ.. நடந்தது என்ன?

Mamata Banerjee: ’மம்தா பானர்ஜி ஜெயித்தால் பாஜகவை ஆதரிப்பார்!’ ஆதிர் ரஞ்சன் பேச்சால் இந்தியா கூட்டணியில் சர்ச்சை!

ஆனால் மறக்காமல் மனைவிக்கு வாழ்த்து மட்டும் சொல்லி வந்துள்ளார். இந்நிலையில் தான் விஷாலின் 5ஆவது திருமண நாள் கடந்த வாரம் வந்தது. குடும்ப சூழ்நிலை காரணமாக விஷால், தனது திருமண நாளை மறந்துவிட்டார். அதோடு மனைவிக்கு வாழ்த்தும் சொல்லவில்லை. முதல் நாள் இரவு வரை கணவரிடம் இருந்து வாழ்த்து வரும் என காத்திருந்த மனைவி மறுநாளும் அவர் வாழ்த்து சொல்லாததால் மிகுந்த கோபமடைந்துள்ளார்.

இதுபற்றி கல்பனா தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். அவர்கள் கல்பனாவின் கணவரை அலுவலகத்தில் இருந்து உடனே வீட்டுக்கு வருமாறு அழைத்தனர். அவர் வந்ததும் திருமண நாளில் மனைவிக்கு வாழ்த்து சொல்ல மறந்தது ஏன் என கேட்டு வாக்குவாதம் செய்தனர். பின்னர் பிரச்சினை முற்றி அவர்கள் விஷாலை சரமாரியாக தாக்க தொடங்கினர்.

வாக்குவாதத்தில் பெண்ணின் சகோதரர் விஷாலின் வாகனத்தையும், அவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் சேதப்படுத்தினார். பின்னர், காட்கோபரில் உள்ள விஷாலின் தாய் வீட்டுக்குச் சென்று இதுகுறித்து முறையிட்டர்னர். அங்கு மீண்டும் தகராறு ஏற்பட்டதால், விஷால் மனைவி மாமியாரை சரமாரியாக அறைந்தார்.

இதனால் சண்டை முற்றிய நிலையில் விஷாலின் தாயாருக்கும் அடி விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த விஷால் மற்றும் அவரது தாயார் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து விஷால் மற்றும் அவரது தாயார் காட்கோபர் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தனர். 

இதையடுத்து போலீசார் விஷாலின் மனைவி, சகோதரர் மற்றும் அவரது பெற்றோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 323, 324, 327, 504 மற்றும் 506 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி