தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Corona Virus : மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா! அபுதாபியில் மெர்ஸ் கொரோனா வைரஸ் – Who எச்சரிக்கை

Corona Virus : மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா! அபுதாபியில் மெர்ஸ் கொரோனா வைரஸ் – WHO எச்சரிக்கை

Priyadarshini R HT Tamil

Jul 25, 2023, 10:54 AM IST

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி இதுவரை 2,605 மெர்ஸ் கொரோனா வைரஸ் பாதிப்புகளும், அது தொடர்பாக 936 இறப்புகளும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி இதுவரை 2,605 மெர்ஸ் கொரோனா வைரஸ் பாதிப்புகளும், அது தொடர்பாக 936 இறப்புகளும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி இதுவரை 2,605 மெர்ஸ் கொரோனா வைரஸ் பாதிப்புகளும், அது தொடர்பாக 936 இறப்புகளும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 108 பேரை இதுவரை பரிசோதனை செய்ததில், யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

World Bee Day 2024: உலக தேனீக்கள் தினத்தின் முக்கியத்துவம், வரலாறு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்..!

அபுதாபியில் மெர்ஸ் கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்ட நபர் இருப்பதை உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஐ.நாவின் அறிக்கைப்படி, 28 வயது ஆண் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி கடந்த மாதம் ஏன் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து சுகாதார ஊழியர்கள் அவருடன் தொடர்பில் இருந்த 108 பேரை பரிசோதித்தனர். ஆனால் அதில் யாருக்கும் இதுவரை தொற்று ஏற்படவில்லை என ராய்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியை உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாதிக்கப்பட்ட நபரின் தற்போதைய உடல்நிலை சீராக உள்ளது. இதற்கிடையில் இந்த நோயை பரப்பும் ஒட்டகங்களுடன் அவர் தொடர்பில் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மெர்ஸ் கொரோனா வைரஸ் என்றால் என்ன?

தி மிடில் ஈஸ்ட் ரெஸ்பரேட்டரி சிண்ரோம் (மெர்ஸ்-கோவி) முதலில் சவுதி அரேபியாவில் 2012ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

அது கண்டுபிடிக்கப்பட்டது முதல் 27 நாடுகள் மெர்ஸ் கொரானா பாதிப்புகள் குறித்து அறிவித்தது. அதில் அல்ஜீரியா, ஆஸ்திரியா, பெக்ரைன், சீனா, எகிப்து, பிரான்ஸ், கிரீஸ், ஜெர்மனி, ஈரான், இத்தாலி, ஜோர்டன், குவைத், லெபனான், மலோசியா, நெதர்லாந்து, ஓமன், பிலிப்பைன்ஸ், கத்தார், கொரியா, கவுதி அரேபியா, தாய்லாந்து, டூனிசியா, துருக்கி, யுனைடட் அரார் எமிரேட்ஸ், யுனைட்டட் கிங்டம், அமெரிக்கா மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் ஆகும்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, 2,605 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 936 பேர் உயிரிழந்துள்ளனர்.

மெர்ஸ் ஒரு விலங்கியல் நோய், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. சவுதி அரேபியாவில் இந்த நோய் நிறைய பேருக்கு பாதிக்கப்பட்ட ஒட்டகங்களிடம் பாதுகாப்பின்றி தொடர்பு வைத்துக்கொள்ளும் நபர்களுக்கு ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தொற்று ஏற்பட்டால் ஒருவருக்கு தோன்றும் அறிகுறிகள், காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல், சிலருக்கு நிமோனியா ஆகியவை ஏற்படுகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி