தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  என்ன பிளான் - ஹோம் தியேட்டர் வெடித்த விவகாரத்தில் முன்னாள் காதலன் கைது

என்ன பிளான் - ஹோம் தியேட்டர் வெடித்த விவகாரத்தில் முன்னாள் காதலன் கைது

Aarthi V HT Tamil

Apr 05, 2023, 12:45 PM IST

Home Theatre Blast: ஹோம் தியேட்டர் வெடித்த விவகாரத்தில் மணப்பெண்ணின் முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
Home Theatre Blast: ஹோம் தியேட்டர் வெடித்த விவகாரத்தில் மணப்பெண்ணின் முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Home Theatre Blast: ஹோம் தியேட்டர் வெடித்த விவகாரத்தில் மணப்பெண்ணின் முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டு உள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில் உள்ள சமாரி கிராமத்தை சேர்ந்தவர் ஹேமேந்திரா மெரவி. இவர் அஞ்சனா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

World Bee Day 2024: உலக தேனீக்கள் தினத்தின் முக்கியத்துவம், வரலாறு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்..!

திங்கள்கிழமை குடும்ப உறுப்பினர்கள் திருமணப் பரிசைப் பிரித்து கொண்டு இருந்தனர். அப்போது ஹேமேந்திரா மெரவி தனக்கு பரிசாக கிடைத்த ஹோம் தியேட்டரை திறந்து பார்த்து உள்ளார். பின்னர் ஹோம் தியேட்டர் வயரை எலக்ட்ரிக் போர்டில் இணைத்தவுடன் அது வெடித்தது. இதில் மேரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மெராவியின் மூத்த சகோதரர் ராஜ் குமார், 30, மற்றும் ஒன்றரை வயது சிறுவன் உட்பட நான்கு பேர் வெடி விபத்தில் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக கவுரதாவில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மெராவியின் சகோதரர் இறந்தார். மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்த உடனே தடயவியல் நிபுணர்களுடன் போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இது குறித்து ரெங்ககர் காவல் நிலைய அதிகாரி துர்கேஷ் ராவ்டே கூறுகையில், வெடிவிபத்தை ஏற்படுத்தக்கூடிய எரியக்கூடிய வேறு எந்தப் பொருளும் அந்த அறையில் இல்லை.

அந்த அறையில் இருந்த மியூசிக் சிஸ்டம் மட்டுமே தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. வெடி விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் திருமண நாளன்று புதுமண தம்பதிக்கு யாரெல்லாம் பரிசு கொடுத்தார்கள் என்ற பட்டியலை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

அதில் மணமகளின் முன்னாள் காதலன் சர்ஜு என்பவர் இந்த ஹோம் தியேட்டரை வழங்கியது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்த காவல்துறையினர் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் மனிஷா தாகூர் கூறுகையில், "முன்னாள் காதலியைத் திருமணம் செய்துகொண்ட ஹேமேந்திரா மெராவி மீது கோபமாக இருந்தது என்றும், அதனால் தான் வெடி பொருள் நிரம்பிய ஹோம் தியேட்டரைப் பரிசாக கொடுத்து இந்தக் கொலைசம்பவத்தை நிகழ்த்தியதாக வாக்குமுலம் கொடுத்தார்" என தெரிவித்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி