தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Street Dogs Attack: கூட்டத்தில் சிக்கிய சிறுவன் - நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!

Street Dogs Attack: கூட்டத்தில் சிக்கிய சிறுவன் - நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!

Feb 21, 2023, 12:50 PM IST

தெலங்கானாவில் 7 வயது சிறுவனை தெரு நாய்கள் கூட்டம் கடித்து கொலை செய்த சம்பவ வீடியோ காட்சிகள் நெஞ்சை பதற வைக்கிறது.
தெலங்கானாவில் 7 வயது சிறுவனை தெரு நாய்கள் கூட்டம் கடித்து கொலை செய்த சம்பவ வீடியோ காட்சிகள் நெஞ்சை பதற வைக்கிறது.

தெலங்கானாவில் 7 வயது சிறுவனை தெரு நாய்கள் கூட்டம் கடித்து கொலை செய்த சம்பவ வீடியோ காட்சிகள் நெஞ்சை பதற வைக்கிறது.

தெலங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் பகுதியில் சேர்ந்தவர் ஐந்து வயது சிறுவன் பிரதீப். தந்தை காவலாளியாக வேலை பார்க்கும் பகுதிக்குச் சென்ற போது கொடூர சம்பவம் இந்த சிறுவனுக்கு நிகழ்ந்துள்ளது. அந்த துயர சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

ட்ரெண்டிங் செய்திகள்

Amit Shah: ’ஒடிசாவை ஒரு தமிழன் ஆள்வதா?’ மண்ணின் மைந்தனை முதல்வர் ஆக்குவோம்! வி.கே.பாண்டியன் குறித்து கொந்தளித்த அமித்ஷா!

WhatsApp: வாட்ஸ்அப்பில் படிக்காத செய்திகளை விரைவில் அழிக்கலாம்: ஆப்ஷனின் சிறப்பம்சம் என்ன?

Kalasha Naidu: சமூக சேவையின் சாதனை: 10 வயதில் உலக அளவில் கலைப்படைப்பும் கருணையும் பாய்ச்சிய கலாஷா நாயுடு

Fact Check: சீனாவின் அரசியலமைப்பு புத்தகத்துடன் ராகுல் காந்தி பரப்புரை செய்தாரா?..வைரல் போட்டோவின் உண்மை என்ன?

அந்த வீடியோவில்," ஐந்து வயது சிறுவன் பிரதீப் தனியாக நடந்து செல்கிறார். அப்போது திடீரென தெருவில் நின்று கொண்டிருந்த மூன்று நாய்கள் அந்த சிறுவனை சூழ்கின்றன. இதனால் பதற்றம் அடைந்த சிறுவன் நாய்களிடம் இருந்து தப்பிக்க ஓடுகிறார்.

ஆனால் நாய்கள் ஓடுகின்ற சிறுவனை துரத்தி கீழே தள்ளி அவரை கடிக்கத் தொடங்குகின்றன. ஒவ்வொரு முறையும் நாய்களிடமிருந்து தப்பிக்க சிறுவன் எழுந்த போது எல்லா நாய்களும் சேர்ந்து அவரை கீழே தள்ளி விட்டு கடிக்கின்றன.

தெரு நாய்களால் கொடூரமாக தாக்கப்பட்டு படுகாயம் அடைந்து சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

தெரு நாய்களால் சிறு குழந்தைகள் பாதிக்கப்படுவது சமீபகாலமாக அதிகமாக நடந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தர பிரதேசத்தில் தெரு நாய்கள் கடித்து ஏழு வயது சிறுவன் உயிர் இழந்தார். அதேபோல் குஜராத் மாநிலத்தில் நான்கு வயது சிறுவன் தெரு நாய்கள் கடித்து உயிர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெரு நாய்களால் உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற காரணத்தினால் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்கள் மட்டுமல்லாது பொதுவாகவும் பல கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி