தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: உயிரோடு புதைக்கப்பட்ட அபிராமி.. பதறிய கார்த்திக்.. கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

Karthigai Deepam: உயிரோடு புதைக்கப்பட்ட அபிராமி.. பதறிய கார்த்திக்.. கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

Apr 09, 2024, 03:01 PM IST

உயிரோடு புதைக்கப்பட்ட அபிராமி.. அம்மாவை காப்பாற்றுவானா கார்த்திக்? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!
உயிரோடு புதைக்கப்பட்ட அபிராமி.. அம்மாவை காப்பாற்றுவானா கார்த்திக்? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

உயிரோடு புதைக்கப்பட்ட அபிராமி.. அம்மாவை காப்பாற்றுவானா கார்த்திக்? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

ட்ரெண்டிங் செய்திகள்

Actress Husband Also Died: தெலுங்கு நடிகை பவித்ரா ஜெயராம் உயிரிழந்த சோகத்தில் கணவரும் நடிகருமான சந்திரகாந்த் அகால மரணம்!

Kavin In Vetrimaaran Film: ஆஹா..வெற்றிமாறன் தயாரிக்க.. ஆண்ட்ரியா நாயகியாக நடிக்க.. பெரிய ஹீரோவான கவின்!

Siddharth: ‘சித்தா’ கொடுத்த பம்பர் ஹிட்; சிவகார்த்தியேனின் நெருக்கமானவருக்கு டேட் கொடுத்த சித்தார்த்! - அறிவிப்பு உள்ளே!

Thalapathy Vijay: ‘டேய் ஒழுங்கா பண்றா…சம்பவம் தரமா இருக்கணும்’ - கோட் அப்டேட் கொடுத்த வெங்கட்பிரபு

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரவுடிகள் அபிராமியை கடத்தி வந்து தோப்புக்குள் நுழைந்த நிலையில், கார்த்திக்கும் உள்ளே நுழைந்தான். அதனை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

கார்த்திக் ரவுடிகளிடம் சண்டையிட்டு கொண்டிருக்க, மறுபக்கம் ரவுடி மணியும், அவனது ஆட்களும் சேர்ந்து அபிராமியை உயிரோடு புதைக்கின்றனர்.கார்த்திக் தன்னுடன் சண்டை போட்ட ரவுடிகளை அடித்து விட்டு உள்ளே நுழையும் போது, மணியும் அவனது ஆட்களும் எதிரில் வருகின்றனர்.

அவர்களை பிடித்து எங்க அம்மா எங்க டா என்று கேட்க, எங்களுக்கு தெரியாது என்று அவர்கள் உண்மையை மறைக்கின்றனர். 

இதற்கிடையே கார்த்திக் அனுப்பிய லொகேஷனை வைத்து போலீஸ் தோப்புக்கு வந்து விடுகின்றனர். தொடர்ந்து மொத்தமாக மணியையும், ரவுடிகளையும் கைது செய்து ஜெயிலுக்குள் அடைக்கின்றனர்.

கார்த்திக்கிற்கு அம்மா  அந்த தோப்புக்குள் தான் இருக்கிறார் என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. அதனை தொடர்ந்து உள்ளே சென்று அபிராமியை  அவன் தேட, அங்கிருந்த மண் வெட்டி, குவியல் உள்ளிட்டவற்றை பார்த்து சந்தேகப்பட்டு அந்த இடத்தை தோண்டுகிறான். 

அப்போது அங்கு அபிராமி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து அவரை வெளியே எடுக்கிறான். தொடர்ந்து மூச்சு பேச்சு இல்லாமல் இருக்கும் அம்மாவை தூக்கி கொண்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கிறான்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன? 

கார்த்திக் ஹாஸ்பிடலுக்கு காரில் வர, ரவுடிகள் அபிராமியை ஆம்புலன்ஸில் கடத்திக்கொண்டு கிளம்பிச் சென்றனர். அதை கண்டுபிடித்த கார்த்திக், ஆம்புலன்சை பின் தொடர்ந்தான். இதற்கிடையே போலீசுக்கும் தகவல் கொடுத்து விட்டான்.

இதனை தொடர்ந்து ரவுடிகள் ஒரு தோப்புக்குள் காரை விட்டனர். மேலும் அங்கே கேட் அருகே இருக்கும் வாட்ச்மேனிடம், யார் வந்து கதவை திறக்கச் சொன்னாலும் திறக்க கூடாது. யார் வந்தாலும் உள்ள விடக்கூடாது என கண்டிஷன் போட்டு சென்றனர். 

இதனிடையே, ரவுடிகளின் காரை மிஸ் செய்த கார்த்திக், எங்க போனாங்க என்று தெரியாமல் குழம்பி, இங்கும் அங்குமாக அலைந்தான். ஒரு கட்டத்தில், தோப்பை பார்த்ததும் சந்தேகம் வந்து அங்கு  சென்றான். 

அங்கு முன்னால் அமர்ந்து இருந்த வாட்ச்மேனை கதவை திறக்கச் சொல்ல அவனோ, ரவுடிகள் சொன்னது போல கதவை திறக்க முடியாது யாரும் உள்ள போகக்கூடாது என சொன்னான். 

உடனே கார்த்திக், அவரிடம் சண்டை போட்டு காரை உள்ளே எடுத்துச் செல்ல, ரவுடிகள் கார்த்தியை சுற்றிவழைத்தனர். இதனையடுத்து அபிராமி இருக்கும் இடம் இதுதான் என்பதை உறுதி செய்த கார்த்திக் ரவுடிகளிடம் சண்டையிட்டான். 

மறுபுறம் அபிராமியை ஆம்புலன்ஸில் தூக்கி வந்த மணி, ஐஸ்வர்யாவுக்கு போன் போட்டு, அபிராமியை தூக்கிட்டு வந்துட்டோம்; ஆனால் கார்த்திக்கும் எங்கள பார்த்து பின் தொடர்ந்து வருகிறான். எப்ப வேணாலும் இங்க வரலாம் என்று சொல்ல, ஐஸ்வர்யா ஒன்னு பண்ணுங்க, அபிராமியை அங்கேயே விட்டுட்டு நீங்க எஸ்கேப் ஆகிடூங்க, கார்த்திக் கிட்ட மாட்னா அவ்வளவுதான் என்று எச்சரித்தாள். 

ஆனால் மணியோ, அபிராமி என் முகத்தைப் பார்த்து இருக்காங்க, இப்படியே விட்டா அவங்க என்ன நிச்சயம் அடையாளம் காட்டிடுவாங்க; அப்படி நான் மாட்டிக்கிட்டா நீங்களும் மாட்டிக்குவீங்க; அதனால அவங்கள கொன்னுடுறேன் என்று சொல்கிறான். அதற்கு ஐஸ்வர்யா வேண்டாம் பெரிய பிரச்சினை ஆயிடும் என்று கூறினான். 

ஆனால் மணி எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் ஒரு பிரச்சினையும் வராது என்று சொல்லி போனை வைக்க, ஐஸ்வர்யாவுக்கு பிபி ஏறியது.

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி