தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: தீச்சட்டியை கையில் கொடுத்த தீபா..சூட்டில் வெந்த ரியா.. விறுவிறு கார்த்திகை தீபம்!

Karthigai Deepam: தீச்சட்டியை கையில் கொடுத்த தீபா..சூட்டில் வெந்த ரியா.. விறுவிறு கார்த்திகை தீபம்!

May 02, 2024, 02:20 PM IST

கோயிலுக்கு வந்த ரியா, கடைசி நேரத்தில் பரிகாரம் செய்ய முடியாது, உன்னால முடிந்ததை பார்த்துக்க என்று சொல்ல தீபா, ஆனந்தை கூப்பிட்டு நிற்க வைத்து ஷாக் கொடுக்கிறாள்.
கோயிலுக்கு வந்த ரியா, கடைசி நேரத்தில் பரிகாரம் செய்ய முடியாது, உன்னால முடிந்ததை பார்த்துக்க என்று சொல்ல தீபா, ஆனந்தை கூப்பிட்டு நிற்க வைத்து ஷாக் கொடுக்கிறாள்.

கோயிலுக்கு வந்த ரியா, கடைசி நேரத்தில் பரிகாரம் செய்ய முடியாது, உன்னால முடிந்ததை பார்த்துக்க என்று சொல்ல தீபா, ஆனந்தை கூப்பிட்டு நிற்க வைத்து ஷாக் கொடுக்கிறாள்.

ரியாவை சிக்க வைத்த தீபா.. ஆனந்த் கொடுத்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

ட்ரெண்டிங் செய்திகள்

Actor Ramarajan: ‘அடுத்த படத்தில் கண்டிப்பா டூயட் உண்டு; கரகாட்டக்காரன் படத்தின் 2ம் பாகம் வருமா?’ - ராமராஜன் பேட்டி

67 years of Manamagan Thevai: காதல், காமெடி கலந்த ஆள்மாறாட்ட கதை! பம்பர கண்ணாலே பாடல் இடம்பிடித்த படம்

HBD K. Jamuna Rani: 6,000 பாடல்கள் பாடியவர்.. பல ஜாம்பவான்களுடன் பணிபுரிந்த அனுபவம் கொண்ட ஜமுனா ராணி பிறந்த நாள்

Tamannaah Bhatia: படுக்கையறை காட்சியில் நடிக்க பயப்படும் நடிகர்கள்.. காரணத்தை விளக்கிய தமன்னா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்திக்கு கையில் காயம் ஏற்பட, அதைப்பார்த்த அபிராமி பதறிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது, வீட்டிற்கு வரும் ஜோசியர், ஆனந்த் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அவருடைய மனைவி ரியா தான் பரிகாரம் செய்யணும் என்று சொல்லிச் செல்கிறாள். ஆனந்த் அங்கிருந்து கிளம்பி சென்றதும், தீபா அபிராமியிடம், அந்த ஜோசியர் டூப் தான், நான் தான் வர சொன்னேன் என்று சொல்கிறாள்.

அதன் பிறகு ரியாவிடம் சென்று ஆனந்துக்காக பரிகாரம் பண்ணனும் என்று சொல்கிறாள். ஆனால் அவளோ, என்னால அதெல்லாம் பண்ண முடியாது என்று சொல்கிறாள். பிறகு ஆனந்தை கூப்பிட்டு, உனக்காக பரிகாரம் பண்ண முடியாதுனு சொல்றாங்க என்று போட்டு கொடுக்கிறார்கள். மேலும் அபிராமி சரி விடுப்பா நான் மீனாட்சி கிட்ட சொல்றேன், உனக்காக அவ கண்டிப்பா பண்ணுவாள் என்று சொல்கிறாள்.

அங்க பரிகாரம் செய்ய முடியாதுனு சொல்லிடலாம் என்று ஐடியா கொடுக்கிறாள் ஐஸ்வர்யா!

இதைக்கேட்ட ஆனந்த் அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல, எனக்காக ரியா பண்ணுவா என்று வாக்கு கொடுக்க, வேறு வழியின்றி ரியா ஒப்பு கொள்கிறாள். அடுத்து ஐஸ்வர்யா ரியாவிடம் நீ ஒன்னும் கவலைப்படாத..ஆனந்த் கோயிலுக்கு  வர மாட்டான், அங்க பரிகாரம் செய்ய முடியாதுனு சொல்லிடலாம் என்று ஐடியா கொடுக்கிறாள்.

அடுத்து தீபா கார்த்திக்கு சாப்பாடு கொண்டு வர, சிம்பிளாக வந்த அவளை பார்த்து செக்யூரிட்டி கார்த்திக் மனைவின்னு நம்ப முடியாமல், உள்ளே விட மறுக்கிறான். இதை பார்த்து அருண் தீபாவை உள்ளே அழைத்துச் செல்கிறான். கார்த்திக் எல்லோருக்கும் தீபாவை அறிமுகம் செய்து வைத்து, அவளை பாட்டு பாடவும் வைக்கிறான்.

கடைசி நேரத்தில் பரிகாரம் செய்ய முடியாது, உன்னால முடிந்ததை பார்த்துக்க என்று ரியா சாடல்!

இந்தப்பக்கம் கோயிலுக்கு வந்த ரியா, கடைசி நேரத்தில் பரிகாரம் செய்ய முடியாது, உன்னால முடிந்ததை பார்த்துக்க என்று சொல்ல தீபா, ஆனந்தை கூப்பிட்டு நிற்க வைத்து ஷாக் கொடுக்கிறாள்.

இதனால் ரியா சிக்கி கொள்ள, அவளை அங்கபிரதர்சனம் செய்ய வைத்து, கையில் தீ சட்டியை கொடுக்க, ரியா சூடு தாங்காமல் தவிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி