Vishal: ‘ஆரம்பமான கட்டப்பஞ்சாயத்து.. ஏன் இத்தனை சங்கங்கள்?’ .. நீதி மூலம் பதில் சொல்ல காத்திருக்கும் விஷால்!
Apr 26, 2024, 09:53 AM IST
"பல்வேறு பிரிவுகளின் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நன்றி, நீங்கள் தயாரிப்பாளர்களுக்காக பல சங்கங்கள் வைத்திப்பது என இருக்கிறது என்று கடவுள் அறிந்திருக்கிறார். இது உங்கள் அனைவருக்கும் தான் அவமானம்"
ஆக்ஷன் ஹீரோ விஷால், மாஸ் டைரக்டர் ஹரி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் 'ரத்னம்'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'ரத்னம்'. இந்த படத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம். ரத்னம் திரைப்படம் தெலுங்கில் ஸ்ரீ சிரி சாய் சினிமாஸ் பேனரின் கீழ் சிஎச் சதீஷ் குமார் மற்றும் கே ராஜ் குமார் இணைந்து வெளியிடுகின்றனர்.
ஹரி இயக்கத்தில் விஷால் இணைவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே ரத்னம் படத்திற்கு முன்பாக தாமிரபரணி (2007) மற்றும் பூஜை (2014) படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக விஷாலுடன் இணைந்து ஈருக்கிறார்.
பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
நடிகர் விஷால் ரத்னம் படத்திற்கு எதிராக கட்டப்பஞ்சாயத்து நடந்து வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார்.
இது தொடர்பாக விஷால் தனது எக்ஸ் தளத்தில் காட்டமான பதிவு ஒன்றை வெளியீட்டு உள்ளார். அதில், “ இறுதியாக கட்டப்பஞ்சாயத்து எந்த பயமோ, வருத்தமோ இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவுக்கு, தியேட்டர் அசோசியேஷனின் அன்பான செயற்குழு உறுப்பினர்களே, கங்காரு நீதிமன்றங்கள் இன்னும் இருக்கிறது மற்றும் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.
ஆனால் என்னைப் போன்ற ஒரு போராளிக்கு முன்பு இது எல்லாம் ஒன்றும் கிடையாது. சற்று தாமதமானாலும் நிச்சயம் உங்களை நீதியின் மூலம் வீழ்த்துவேன். எல்லா தயாரிப்பாளர்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்று எண்ணும் நபர் நான்.
அவர்கள் திரைப்படங்களை பொழுதுபோக்காக எடுப்பதற்காக அல்ல என்றும் நான் நம்புகிறேன். பல்வேறு பிரிவுகளின் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நன்றி, நீங்கள் தயாரிப்பாளர்களுக்காக பல சங்கங்கள் வைத்திப்பது என இருக்கிறது என்று கடவுள் அறிந்திருக்கிறார். இது உங்கள் அனைவருக்கும் தான் அவமானம்.
பொதுச் செயலாளராகவோ அல்லது ஒரு நடிகராகவோ அல்லது தயாரிப்பாளராகவோ அல்ல. ஆனால் இது முன்னாள் தயாரிப்பாளராக தன் குழந்தையை பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல வியாழன் மாலை என்ன நடந்தது என எனக்கு நன்கு தெரியும் “ என காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த பாடல்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் சென்சார் பணிகளும் நிறைவடைந்துள்ளது. அந்தளவிற்கு சென்சார் உறுப்பினர்கள் படத்தைப் பார்த்து யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஆக்ஷனுடன் நல்ல செய்தியும் உள்ள இந்தப் படம் குடும்பப் படம் எனப் பாராட்டப்படுகிறது. சமீபத்தில் வெளியான எதுவாய்போ எதுவாய்போ.. என்ற பாடல் கேட்போரை கவர்ந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் விஷால் கூட்டணியின் முதல் படம் ரத்னம் என்பதால் இசை ஆர்வலர்களின் கவனம் ரத்னம் மீது விழுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்