தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sandakozhi Serial: மகாவின் மீது விழும் திருட்டுப் பழி.. விக்ரமால் வந்த சிக்கல் - சண்டக்கோழி சீரியல் அப்டேட்

Sandakozhi Serial: மகாவின் மீது விழும் திருட்டுப் பழி.. விக்ரமால் வந்த சிக்கல் - சண்டக்கோழி சீரியல் அப்டேட்

May 10, 2023, 12:01 PM IST

நகையை கண்டுபிடிக்க மகாலட்சுமி ஒருவரின் பையை எடுத்து பரிசோதனை செய்யும் போது இதை பார்த்த விக்ரம் மகா இந்த பையை எடுத்து திருட பார்ப்பதாக தவறாக புரிந்து கொண்டு போலீசில் புகார் கொடுக்கிறான்
நகையை கண்டுபிடிக்க மகாலட்சுமி ஒருவரின் பையை எடுத்து பரிசோதனை செய்யும் போது இதை பார்த்த விக்ரம் மகா இந்த பையை எடுத்து திருட பார்ப்பதாக தவறாக புரிந்து கொண்டு போலீசில் புகார் கொடுக்கிறான்

நகையை கண்டுபிடிக்க மகாலட்சுமி ஒருவரின் பையை எடுத்து பரிசோதனை செய்யும் போது இதை பார்த்த விக்ரம் மகா இந்த பையை எடுத்து திருட பார்ப்பதாக தவறாக புரிந்து கொண்டு போலீசில் புகார் கொடுக்கிறான்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கியுள்ள புத்தம் புதிய சீரியல் சண்டக்கோழி.

ட்ரெண்டிங் செய்திகள்

Indian 2: ஒருவழியாக தொப்பியைப் போட்டுக்கொண்டு வந்த சேனாதிபதி.. இந்தியன் 2 ரிலீஸ் டேட்டை அறிவித்த ஷங்கர்!

Good Bad Ugly: கையில் டாட்டூ.. மாஸ் கூலர்.. 3 பரிணாமங்கள்.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

Sobhita Dhulipala:‘தங்கத் தாரகை மகளே’ கேன்ஸ் விழாவில் தங்க ஆடையில் ஜொலித்த சோபிதா துலிபாலா: உடன் அந்த நடிகர் இருக்காரா?

Actress Madhoo: பாறையிலேயே உறக்கம், வெட்ட வெளியில் உடை மாற்றிய தருணம்! ஷுட்டிங்கில் நடந்த தர்மசங்கடம் - நடிகை மதுபாலா

முதல் நாள் எபிசோட்டில் நாயகன் விக்ரம் மற்றும் நாயகி மகாவுக்கும் இடையே முதல் உருவான நிலையில் வரும் நாட்களில் இந்த சீரியலில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

அதாவது, மகாவின் பெரியம்மா மகனுக்கும் ஹீரோ விக்ரமின் தங்கச்சிக்கும் திருமணம் நடக்க உள்ளது. இந்த கல்யாணத்துக்கு இரண்டு குடும்பமும் ஒன்று சேருகிறது.

இந்த கல்யாணத்தில் ஆட்டம் பாட்டம் என சந்தோஷமாக இருக்கும் மகாலட்சுமி விக்ரமை பார்த்ததும் ஏற்கனவே இருக்கும் கோபத்தில் அவனை வம்பு இழுத்து கீழே தள்ளி விடுகிறாள். இதனால் அவனுக்கும் மகாவுக்கும் இடையேயான மோதல் இன்னும் அதிகரிக்கிறது.

அடுத்ததாக விக்ரமின் தம்பி விஜய் மகாவின் அக்கா ஐஸ்வர்யாவை காதலிக்கிறான் என்பது தெரிய வருகிறது. அதே சமயம் மகாவின் பெரியம்மா மகள் அபிநயாவும் விஜயை காதலிக்கிறாள்‌.

இதனால் ஏற்கனவே மகாலட்சுமி குடும்பத்தின் மீது அபிநயாவுக்கு கோபம் இருக்கும் நிலையில் கல்யாணத்தில் அபிநயா செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தையும் மகாவையே செய்ய வைக்க அபிநயாவுக்கு இவர்கள் மீது இன்னும் கோபம் அதிகமாகிறது.

இதனால் மகாவை பழிவாங்க கல்யாணத்திற்காக வாங்கி வைத்திருந்த நகையை அபிநயா திருடி விடுகிறாள்‌. இதன் காரணமாக மகாவின் மீது திருட்டுப் பழி விழ அவள் நான் நகையை எடுக்கவில்லை என சொல்கிறாள்‌.

நகையை கண்டுபிடிக்க மகாலட்சுமி ஒருவரின் பையை எடுத்து பரிசோதனை செய்யும் போது இதை பார்த்த விக்ரம் மகா இந்த பையை எடுத்து திருட பார்ப்பதாக தவறாக புரிந்து கொண்டு போலீசில் புகார் கொடுக்கிறான். இதனால் மகாலட்சுமி குடும்பம் மொத்தமும் அவமானப்பட்டு நிற்கிறது.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன? தன் மீது இது விழுந்த திருட்டு பழியில் இருந்து மகாலட்சுமி எப்படி மீண்டு வெளியே வரப் போகிறாள்? என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனவே சண்டக்கோழி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.‘

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி