தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Maari: மாரியால் காத்திருந்த அதிர்ச்சி.. தேவியை கட்டுபடுத்த தாரா எடுத்த முடிவு

Maari: மாரியால் காத்திருந்த அதிர்ச்சி.. தேவியை கட்டுபடுத்த தாரா எடுத்த முடிவு

Aarthi V HT Tamil

Feb 21, 2023, 01:33 PM IST

மாரி சீரியல் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்க போகிறது.
மாரி சீரியல் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்க போகிறது.

மாரி சீரியல் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்க போகிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.

ட்ரெண்டிங் செய்திகள்

YouTuber Irfan: குழந்தை பாலினத்தை வெளியிட்ட விவகாரம்; இர்ஃபானை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைப்பு! - சுகாதாரத்துறை

Suchitra issue: சுத்தி விட்ட சுசித்ரா.. ‘பட்டியலின சமூகத்த அப்படி ஆபாசமா’- கார்த்திக் மீது பாய்ந்த புகார்

Vadivukkarasi: ‘சிவா உங்கிட்ட வாய்ப்பு கேட்டதுக்கு நீ.. அட போப்பா..’ - ஓப்பனாக பேசிய வடிவுக்கரசி

Karthigai Deepam: ‘ரம்யாவிற்கு கார்த்திக் சட்டையா; வியர்வையை நுகர வைத்த காதல்; கடுகடுத்த தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் தாரா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்த நிலையில் மாரி கோவிலில் இருந்து வர சூர்யா தாரா அம்மாவுக்கு ஆரத்தி எடுக்காம நீ எங்க போன என சூர்யா சத்தம் போடுகிறான்.

அடுத்து மாரி அவங்க டிஸ்சார்ஜ் ஆகுறாங்கனு எனக்கு தெரியும், அதனால் தான் கோவிலுக்கு போய் அவங்களுக்காக அர்ச்சனை செய்து விட்டு வந்ததாக சொல்கிறாள். மேலும் இனிமே தாரா அம்மாவை நான் பார்த்துக்கிறேன். நீங்க ஜாஸ்மினை கல்யாணம் பண்ணுவதற்கான வேலையை பாருங்க என சொல்லி உள்ளே போகிறாள்.

அடுத்து சூர்யா ரூமுக்கு வந்து மாரியிடம் யார் என்ன சொன்னாலும் தாரா அம்மா பத்தி தப்பா சொல்றதை என்னால் நம்ப முடியாது, அவங்க எனக்காக வாழறாங்க. இதுவரைக்கும் அவங்க அரவிந்த்தை கூட போய் பார்க்கல, விக்ரமை யாரோ குழப்பி இருக்காங்க என சொல்ல மாரியும் உண்மையை சொல்ல முடியாமல் ஆமாம் என சொல்கிறாள்.

மறுபக்கம் தாரா, ஜாஸ்மின், சங்கரபாண்டி ஆகியோர் மாரியின் பேச்சு வித்தியாசமாக இருக்கு என பேசிக் கொண்டிருக்க ஶ்ரீஜா தேவியம்மா மாரி முன்னாடி தோன்றி பேசிய விஷயத்தை சொல்கிறாள். தேவி அம்மா மாரியிடம் பேசுவதை நிறுத்தாமல் அவளை ஒண்ணும் பண்ண முடியாது என சொல்லி முதலில் தேவியின் சக்தியை கட்டுபடுத்த வேண்டும், எனக்கே தெரிந்த மலையாள மாந்தரீகர் ஒருவர் இருப்பதாக சொல்கிறாள்.

அடுத்து தாரா தேவி அம்மா முன்பு நின்று இவ்வளவு வேலையும் பார்க்கிறது நீதானா? உன்னை கொன்ற எனக்கு அடுத்து என்ன பண்ணணும்னு தெரியும், மாரியை வெளியே அனுப்பி இந்த சொத்தை அடையாமல் விட மாட்டேன் என சபதம் எடுக்கிறாள்.

அதோடு மறுநாள் தாரா, ஜாஸ்மின், சங்கரபாண்டி, ஶ்ரீஜா என எல்லோரும் சேர்ந்து மாந்தரீகரை சந்தித்து விஷயத்தை சொல்ல அவர் 4 முட்டை, 4 எலுமிச்சை பழத்தை கொடுத்து வீட்டின் நான்கு பக்கமும் இதை புதைக்க சொல்கிறார். அப்படி செய்தால் தேவியால் வீட்டுக்குள் வர முடியாது, மாரியிடமும் பேச முடியாது என சொல்கிறார்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பா.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி