தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Maari Serial: எச்சரித்த டாக்டரை கொல்ல துணிந்த ஜாஸ்மின்

Maari Serial: எச்சரித்த டாக்டரை கொல்ல துணிந்த ஜாஸ்மின்

Aarthi V HT Tamil

Feb 15, 2023, 12:07 PM IST

மாரி தொடரில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.
மாரி தொடரில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

மாரி தொடரில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.

ட்ரெண்டிங் செய்திகள்

PVR Inox: ‘பிவிஆர் ஐநாக்ஸ் உணவு விற்பனையில் மட்டும் கடந்த ஆண்டு ரூ.1900 கோடி வருவாய் ஈட்டியது’-அறிக்கையில் தகவல்

Youtuber Irfan : Youtuber இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை பரிந்துரை.. காரணம் என்ன தெரியுமா? இதோ பாருங்க!

L2 - Empuran : மாஸ் லுக்கில் மோகன்லால்.. ‘L2 - எம்புரான்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து!

Ilaiyaraaja : நான் இன்னும் சாதிக்கவில்லை.. இசையும் எனக்கு இயற்கையாக வருகிறது.. இசையை நான் கற்றுக்கொள்ளவில்லை - இளையராஜா!

இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் டாக்டர் ஜாஸ்மீனை அழைத்து சூர்யா குடும்பத்திடம் அபார்ஷன் செய்த விஷயத்தை சொல்லுமாறு சொல்ல ஜாஸ்மின் அவர்களிடம் உண்மையை சொல்ல கால அவகாசம் கேட்கிறார்.

அடுத்து சூர்யா பால் குடிக்கும் போது பாலில் சர்க்கரை இல்லை என சொல்ல மாரி அதை குடித்து பார்த்து சர்க்கரை இருக்கிறது என சொல்ல மீண்டும் சூர்யா பாலை வாங்கி குடித்து சர்க்கரை இல்லை என சொல்ல இருவரும் மாறி மாறி பாலை குடிக்கின்றனர். இப்படி இருவருக்கும் இடையே அன்னோன்யம் அதிகரிக்கிறது.

மறுபக்கம் டாக்டர் மீண்டும் ஜாஸ்மினை அழைத்து உண்மையை சொல்லி விட்டாயா என கேட்க ஜாஸ்மின் உங்களிடம் தனியாக பேச வேண்டும் என சொல்கிறாள். மறுநாள் ஜாஸ்மின் டாக்டரை ஹாஸ்பிடல் சென்று சந்தித்து அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்ய டாக்டர் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.

இனி ஜாஸ்மின் உண்மையை சொல்ல மாட்டாள் என அறிந்து கொண்ட டாக்டர் சூர்யாவிடம் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல வேண்டும் என போன் போட்டு ஹாஸ்பிடலுக்கு வர சொல்கிறார். சூர்யாவும் ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வந்து விடுகிறான்.

இதற்கிடையில் டாக்டரை சமாதானம் செய்ய முயற்சி செய்யும் ஜாஸ்மின் அவரிடம் தனியாக பேச வேண்டும் என மாடியின் மேலே அழைத்துச் சென்று காலில் விழுந்து கெஞ்சுவது போல நடித்து அவரது காலை இழுத்து கீழே தள்ளி விடுகிறாள்.

இதை சூர்யா பார்த்து அதிர்ச்சி அடைகிறான். மேலும் கீழே விழுந்த டாக்டர் சூர்யாவிடம் ஏதோ விஷயத்தை சொல்ல வர கடைசியில் அவரால் சொல்ல முடியாமல் போகிறது. இதனால் சூர்யா மிகவும் குழப்பம் அடைகிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணதவறாதீர்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி