தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Ram Join Siva: இயக்குநர் ராமுடன் இணையும் நடிகர் சிவா -ஷுட்டிங் எப்போது?

Director ram Join Siva: இயக்குநர் ராமுடன் இணையும் நடிகர் சிவா -ஷுட்டிங் எப்போது?

Jan 28, 2023, 11:40 AM IST

பிரபல இயக்குநர் ராமுடன் நடிகர் சிவா இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
பிரபல இயக்குநர் ராமுடன் நடிகர் சிவா இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

பிரபல இயக்குநர் ராமுடன் நடிகர் சிவா இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

தனியார் ரேடியோவில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்தவர் சிவா. அதன் பின்னர் சினிமாவிலும் கால்பதித்த அவர் '12B' என்ற படத்தில் ஷ்யாமின் நண்பராக நடித்தார். தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘ஆளவந்தான்’ ‘விசில்’ ஆகிய படங்களில் நடித்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

PVR Inox: ‘பிவிஆர் ஐநாக்ஸ் உணவு விற்பனையில் மட்டும் கடந்த ஆண்டு ரூ.1900 கோடி வருவாய் ஈட்டியது’-அறிக்கையில் தகவல்

Youtuber Irfan : Youtuber இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை பரிந்துரை.. காரணம் என்ன தெரியுமா? இதோ பாருங்க!

L2 - Empuran : மாஸ் லுக்கில் மோகன்லால்.. ‘L2 - எம்புரான்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து!

Ilaiyaraaja : நான் இன்னும் சாதிக்கவில்லை.. இசையும் எனக்கு இயற்கையாக வருகிறது.. இசையை நான் கற்றுக்கொள்ளவில்லை - இளையராஜா!

இதனைத்தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இய்க்கத்தில் வெளியான ‘சென்னை 600028’ படத்தில் நடித்தார். இந்தப்படம் அவருக்கு சினிமாவில் பெரிய பிரேக்காக அமைந்தது. அதனைத்தொடர்ந்து ‘சரோஜா’ ‘தமிழ்படம்’ ‘வ குவாட்டர் கட்டிங்’ ‘கலகலப்பு’ ‘தில்லு முல்லு’ ‘வணக்கம் சென்னை’ ‘ தமிழ் படம் 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இந்த நிலையில் இவர் தற்போது ‘கற்றது தமிழ்’ ‘தங்கமீன்கள்’ ‘தரமணி’ ‘பேரன்பு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ராமுடன் இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்படத்தின் ஷூட்டிங் வருகிற பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து தொடங்க இருக்கிறது. இயக்குநர் ராம் தற்போது மலையாள இயக்குநர் நிவின் பாலி, அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் துவங்கி அதன்பிறகு கேரளாவில் வண்டிப்பெரியார், வாகமன் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

 

 

சென்னையில் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏஆர்ஆர் ஃபிலிம் சிட்டியில் மிகப் பெரிய ரயில் செட் ஒன்று போடப்பட்டு, அதில் நிவின்பாலி, சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன; தற்போது படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு மக்களிடம் வரவேற்பை பெற்றது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி