தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Amudhavum Annalakshmiyum: நிச்சயதார்த்தத்தை நிறுத்திய செல்வா…

Amudhavum Annalakshmiyum: நிச்சயதார்த்தத்தை நிறுத்திய செல்வா…

Aarthi V HT Tamil

Feb 20, 2023, 12:45 PM IST

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.
அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோடில் நிச்சயத்தார்த்த ஏற்பாட்டுக்கான வேலைகளை அய்யர் செய்து கொண்டிருக்க, அன்னலட்சுமி அமுதாவிடம் புவனா மட்டும் தான் உன் தம்பியை லவ் பண்றேன்னு சொன்னா, உன் தம்பி ஒண்ணுமே சொல்லலையம்மா என கேக்க, அமுதாவும் அதான் அத்தை எனக்கும் புரியலை என சொல்கிறாள்.

ட்ரெண்டிங் செய்திகள்

அம்மா இல்லாமல் வளர்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? மனிதநேயம் இறந்து கொண்டிருக்கிறது.. நடிகை கல்யாணி உருக்கம்!

Thalapathy 69 : வெளியானது தளபதி 69 குறித்த நியூ அப்பேட்.. தளபதி-69 ல் நடிக்கும் பிரபல மலையாள நடிகை? யார் தெரியுமா?

20 Years Of Aayutha Ezhuthu: 3 வெவ்வேறு கதைகள் இணைந்து கல்லூரி மாணவர் அரசியல்வாதியானால் ‘ஆயுத எழுத்து’

Manickam Narayanan:‘மகிழ்திருமேனிக்கு இதயமே கிடையாது; அஜித்துக்கு இதயம் இருக்கா இல்லையான்னு’ - மாணிக்கம் நாராயணன்

அடுத்து நிச்சயதார்த்த பத்திரிக்கையை படித்து தட்டு மாற்ற போகும் சமயம் செல்வா தனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை என சொல்ல அனைவரும் ஷாக்காகின்றனர். தான் புவனாவை காதலிப்பாதாக சொல்ல சிதம்பரம் கோபத்துடன் அப்ப அந்த குடும்பம் திட்டத்தோட தான் வந்திருக்காக, வழக்கம் போல அவங்க பிராடு புத்தியை காட்டிட்டாங்க என திட்டுகிறார்.

அடுத்து நிச்சயதார்த்த பத்திரிக்கையை படித்து தட்டு மாற்ற போகும் சமயம் செல்வா தனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை என சொல்ல அனைவரும் ஷாக்காகின்றனர். தான் புவனாவை காதலிப்பாதாக சொல்ல சிதம்பரம் கோபத்துடன் அப்ப அந்த குடும்பம் திட்டத்தோட தான் வந்திருக்காக, வழக்கம் போல அவங்க பிராடு புத்தியை காட்டிட்டாங்க என திட்டுகிறார்.

அடுத்து குமரேசன் சிதம்பரத்திடம் சம்மந்தி என் பையனுக்கு முதல்ல அமுதாவை நிச்சயம் பண்ண தான் வந்தோம்.. அப்பவும் இதே மாதிரி பிரச்சனை ஆகி உமாவை கட்டிக்க சொன்னீக.. நாங்க எதுவும் பார்க்காம கட்டிகிட்டோம். இது பொண்ணு பிரச்சனை, அவ மனசுல ஆசையை வளர்த்துபுட்டேன், ஊருக்கே தெரிஞ்சு போச்சு, இப்ப வேண்டாம்னு சொன்னீங்கன்னா என் பொண்ணால தாங்க முடியாது.. உங்க பையன் கிட்ட பேசி புரிய வைங்க என சொல்கிறான்.

அடுத்து சிதம்பரம் அவர்களிடம் இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும் என சொல்ல செல்வா தனியாக அமர்ந்திருக்க சிதம்பரம் அவனிடம் டேய் இங்க பாரு, உங்க அக்கா உமாவோட வாழ்க்கை நல்லா இருக்கனும், அப்புச்சி வாக்கு குடுத்திருக்கேன்.. அப்புச்சி வாக்கை மீறி நீ எதுவும் பண்ண மாட்டேன்னு நம்புறேன் என சொல்ல செல்வம் புவனா மனசுலயும் ஆசைய வளர்த்துட்டன்ப்பா என சொல்கிறார்.

அடுத்து சிதம்பரம் நண்பராக தவமாய் தவமிருந்து மார்க் வருகிறார். நண்பர்களான இருவரும் நீண்ட நாள்களுக்கு பிறகு சந்தித்து கொள்கின்றனர். சிதம்பரம் வருத்தத்துடன் அமர்ந்திருக்க, மார்க் அவரிடம் என்னைய விட உனக்கு நல்ல பிள்ளைங்க, நீ தான் அவங்களை தப்பா நினைச்சுகிட்டிருக்க என சொல்கிறார்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழில் பார்க்கலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி