தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ethirneechal: ‘அலப்பறை கெளப்புவோம்.. தலைவரு நிரந்தரம்’ - வந்து விட்டார் புதிய ஆதி குணசேகரன்!

Ethirneechal: ‘அலப்பறை கெளப்புவோம்.. தலைவரு நிரந்தரம்’ - வந்து விட்டார் புதிய ஆதி குணசேகரன்!

Oct 04, 2023, 10:38 AM IST

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய புரமோவில், புதிய குணசேகரன் அறிமுகமாக இருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய புரமோவில், புதிய குணசேகரன் அறிமுகமாக இருக்கிறார்.

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய புரமோவில், புதிய குணசேகரன் அறிமுகமாக இருக்கிறார்.

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்தவர் மாரிமுத்து. அந்த கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. ஒரு கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியலை அவருக்காக டிவி முன்னே அமர்ந்து பார்த்த ரசிகர்களும் உண்டு. இந்த நிலையில்தான் யாரும் எதிர்பார்க்காத வண்ணம், அண்மையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

அவரது இறப்பு திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் அந்தக் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் அந்தக் கதாபாத்திரத்தில் பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர், புதிய ஆதி குணசேகரன் வருகிறார் என்ற ரீதியில் குழு புரமோ ஒன்றை வெளியிட்டது.

அதனை பார்த்த போது அனைவரும் கூறியது போல, புதிய குணசேகரனாக நடித்திருப்பது வேலராம மூர்த்திதான் என்பது தெரிகிறது. கதைப்படி ஆதி குணசேகரன் தனது சொத்துகளை தம்பிகளின் பெயரில் எழுதி கொடுத்துவிட்டு, எங்கோ சென்றுவிட்டார். தம்பிகள் அனைவரும் அவரை தேடி ஒரு வழியாக கண்டு பிடித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய புரமோ வெளியாகி இருக்கிறது. அந்த புரமோவில், “ எல்லாரும் பதட்டமாக உட்கார்ந்து இருக்க நந்தினி விசாலாட்சியிடம் உங்க புள்ள இப்போது இங்கே வரவேண்டும் என்று சாடுகிறாள். இதனால் கோபமடைந்த விசாலாட்சி, அவளை அடிக்க கை ஓங்குகிறார். இன்னொரு பக்கம் காவல்துறையினர் சக்தியை போட்டு அடித்துக்கொண்டிருக்க, கெத்தாக காரில் என்ட்ரி கொடுக்கிறார் குணசேகரன். இதனைப்பார்த்ததும் சக்தி சந்தோஷத்தில் ஓடி வருகிறான். இப்படியாக இன்றைய புரமோ அமைந்திருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி