தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Sam Pitroda: ‘தென் இந்தியர்கள் நிறம் குறித்த சர்ச்சை!’ காங்கிரஸ் கட்சி பொறுப்பில் இருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா!

Sam Pitroda: ‘தென் இந்தியர்கள் நிறம் குறித்த சர்ச்சை!’ காங்கிரஸ் கட்சி பொறுப்பில் இருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா!

Kathiravan V HT Tamil

May 08, 2024, 07:27 PM IST

”தென் இந்தியர்கள் ஆப்பிரிக்கர்களை போல இருப்பதாக சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கட்சி பொறுப்பில் இருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா செய்துள்ளார்” (HT_PRINT)
”தென் இந்தியர்கள் ஆப்பிரிக்கர்களை போல இருப்பதாக சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கட்சி பொறுப்பில் இருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா செய்துள்ளார்”

”தென் இந்தியர்கள் ஆப்பிரிக்கர்களை போல இருப்பதாக சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கட்சி பொறுப்பில் இருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா செய்துள்ளார்”

இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சாம் பிட்ரோடா விலக முடிவு செய்துள்ளதாகவும், அந்த முடிவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஏற்றுக் கொண்டதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்து உள்ளார். 

ட்ரெண்டிங் செய்திகள்

Fact Check: 2024 லோக்சபா தேர்தல் பேரணியில் உ.பி துணை முதல்வருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதா?

HT Exclusive interview: ‘400 இடங்களுக்கு மேல் ஜெயிப்போம் என்ற பாஜக முழக்கத்தை நீங்கள் ஏற்கிறீர்களா?’-பிரியங்கா பதில்

Cow Protection: ’மோடி மீண்டும் வென்றால் பசுவை கொலை செய்பவர்களை தலைகீழாக தொங்கவிடுவோம்’ பீகாரில் அமித்ஷா ஆவேசம்!

Fact Check: ரவீந்திரநாத் தாகூரின் உருவப்படத்தை பிரதமர் மோடி தலைகீழாக வைத்திருந்தாரா?

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்தியர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது குறித்த அவரது இனவெறிக் கருத்து, நடந்துகொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு இடையே பெரும் அரசியல் சர்ச்சையை உருவாக்கியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்து இருந்தார். 

இப்போது அமெரிக்காவில் இருக்கும் சாம் பிட்ரோடா, ராஜீவ் பிரதமராக இருந்தபோது ராஜீவ் காந்தியின் ஆலோசகராக இருந்தார். 2004 தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, சாம் பிட்ரோடாவை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இந்திய தேசிய அறிவு ஆணையத்தின் தலைவராக நியமித்தார். 2009 ஆம் ஆண்டில், பொது தகவல் உள்கட்டமைப்பு தொடர்பான மன்மோகன் சிங்கின் ஆலோசகராகவும் பிட்ரோடா இருந்தார்.

என்ன சொன்னார் சாம் பிட்ராடோ?

ஓவர்சிஸ் காங்கிரஸ் அமைப்பின் தலைவராக உள்ள சாம் பிட்ரோடா இந்த மாத தொடக்கத்தில் தி ஸ்டேட்ஸ்மேன் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், வெவ்வேறு தோல் நிறங்கள் மற்றும் தோற்றம் கொண்ட மக்கள் இந்தியாவில் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் என்று கூறினார்.

"அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சண்டைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்கள் ஒன்றாக வாழக்கூடிய மிகவும் மகிழ்ச்சியான சூழலில் நாங்கள் 70 முதல் 75 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம்.

கிழக்கில் உள்ளவர்கள் சீனர்கள் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்கள் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்கள் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்கள் போலவும் தோற்றமளிக்கும் இந்தியாவைப் போலவே பன்முகத்தன்மை கொண்ட நாட்டை நாம் ஒன்றாக வைத்திருக்க முடியும். அது ஒரு விஷயமே இல்லை. நாம் அனைவரும் சகோதர சகோதரிகள்" என சாம் பிட்ராடா கூறி இருந்தார்.

பிரதமர் மோடி கண்டனம்

தெலங்கானா மாநிலம் வாராங்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தோல் நிறத்தின் அடிப்படையில் எனது நாட்டு மக்கள் அவமதிக்கப்படுவதை கண்டு எனது நாடு பொறுத்துக்கொள்ளாது. இதை மோடியும் ஒருபோதும் பொறுத்துக் மாட்டான் என்றார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் நிறம் காரணமாக அவருக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் மோடி குற்றம்சாட்டினார்.

தொடந்து பேசிய அவர், “அமெரிக்காவில் 'ஷெஹ்சாதா' (ராகுல் காந்தி) வின் தத்துவ வழிகாட்டியாக ஒரு மாமா இருக்கிறார் என்றும், கிரிக்கெட்டில் மூன்றாவது நடுவரைப் போலவே, இந்த 'ஷெஹ்சாதா (ராகுல் காந்தி)' மூன்றாவது நடுவரிடம் ஆலோசனை பெறுகிறார். கருப்புத் தோல் உள்ளவர்கள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்று இந்த தத்துவ மாமா கூறினார். இதன் பொருள் நீங்கள் நாட்டின் பலரை அவர்களின் தோல் நிறத்தின் அடிப்படையில் துஷ்பிரயோகம் செய்கிறீர்கள் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தென்னிந்திய மக்கள் ஆப்பிரிக்கர்களைப் போல் இருப்பதாக காங்கிரஸ் உணர்கிறது. கர்நாடகா மற்றும் தெலுங்கானாவை ஆளும் காங்கிரஸ் முதல்வர்களை நான் கேட்க விரும்புகிறேன், அத்தகைய கருத்துக்களை உங்களால் ஏற்க முடியுமா?

தமிழக கலாசாரம் பற்றி தொடர்ந்து பேசும் தமிழ்நாடு முதல்வரிடம் கேட்க விரும்புகிறேன், இவ்வளவு பெரிய குற்றச்சாட்டு எழுந்து உள்ளது, தமிழர்களின் சுயமரியாதைக்காக காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணியை திமுக முறித்துக் கொள்ளுமா, அதற்கான தைரியம் உள்ளதா?

மேற்கு இந்தியாவில் வாழும் மக்கள் அரேபியர்களைப் போல இருப்பதாக காங்கிரஸ் உணர்கிறது, நான் 'போலி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவிடம்' கேட்க விரும்புகிறேன், இதை மகாராஷ்டிரா மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?... என கேள்வி எழுப்பினார்.

அடுத்த செய்தி