Modi vs Priyanka Gandhi: ’அம்பானி-அதானி பற்றி ராகுல் பேசவில்லையா?’ பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி!
”மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தொழிலதிபர்கள் கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோரின் பெயர்களை உச்சரிப்பதை ராகுல் காந்தி ஏன் நிறுத்தினார் என்று தனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பி இருந்தார்”

’அம்பானி-அதானி பற்றி ராகுல் பேசவில்லையா?’ பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி! (ANI/PTI)
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தொழிலதிபர்கள் கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி குறித்து பேசுவதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிறுத்தி விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
”தொழிலதிபர்கள் கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோரை திட்டுவதை ஏன் நிறுத்தினார்” என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பிய நிலையில், ரேபரேலியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி பேசினார்.
அப்போது, உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது, கோடீஸ்வரர்களின் 16 லட்சம் கோடி ரூபாய் கடனை மோடி அரசு தள்ளுபடி செய்ததாக குற்றம் சாட்டினார்.