Video: வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைத்து பயணம் செய்த பிரதமர் மோடி
குஜராத் மாநிலத்திற்கு இரண்டு நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி நேற்று பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதனைத்தொடர்ந்து, இன்று காந்தி நகர் ரயில் நிலையத்துக்கு வந்த பிரதமர், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை ஆய்வு செய்து அதன் வசதிகளை பார்வையிட்டாா். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின் கட்டுப்பாட்டு மையத்தையும் பிரதமர் மோடி ஆய்வு செய்தாா். பின்னர் காந்தி நகர் - மும்பை இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்து, அங்கிருந்து கலுபூர் ரயில் நிலையத்துக்கு ரயிலில் பயணம் செய்தாா். அப்போது ரயில்வே ஊழியர்கள், பெண் தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், இளைஞர்கள் உள்பட தன்னுடன் பயணித்த பல்வேறு தரப்பு மக்களுடனும் அவர் கலந்துரையாடினாா்.