தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Crime: பொதுமக்கள் முன்னிலையில் கத்தியை வைத்து இளம்பெண் மீது கொடூர தாக்குதல் - அதிர்ச்சி விடியோ

Crime: பொதுமக்கள் முன்னிலையில் கத்தியை வைத்து இளம்பெண் மீது கொடூர தாக்குதல் - அதிர்ச்சி விடியோ

Jun 28, 2023 12:15 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 28, 2023 12:15 PM IST
  • மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள புணே நகரில் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை கத்தியை வைத்து வேகமாக துரத்தி செல்லும் விடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. பொது இடத்தில் வைத்து 19 வயது இளம்பெண்ணை துரத்திய இளைஞர், பெண்ணின் உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார். புணே நகரில் உள்ள பெருகேட் என்ற பகுதியில் காலை நேரத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில் கத்தியை வைத்து பெண் மீது தாக்குதல் நடத்திய நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக தாக்குதலுக்கு உள்ளான இளம்பெண் வேறொரு நபருடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது அந்த வாகனத்தை வழிமறித்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண் மற்றும் அவருடன் வந்தவரையும் தாக்க முயற்சித்துள்ளார். இதில் முதலில் பெண்ணுடன் வந்த நபரை தாக்கினார். பின்னர் அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சித்த பெண்ணை கத்தியை கையில் பிடித்துக்கொண்டு துரத்தியுள்ளார். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் அந்த பெண்ணை பிடித்து அவரது உடல்களில் பல்வேறு இடங்களில் கத்தியை வைத்து தாக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் ஓடி சென்று தாக்குதலுக்கு உள்ளான பெண்ணை, கத்தியை வைத்திருந்த நபரின் பிடியிலிருந்து விலக்கி, போலீசிடம் ஒப்படைத்தனர். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண் அபாயகட்டத்தில் இருந்து தப்பித்துள்ளார். பெண் மீது தாக்குதல் நடத்தியவர் பெயர் ஜாதவ் என்பதும், தொடர்ந்து அவர் அந்த பெண்ணை பின் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார்.
More