தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மனிதாபிமானம் இருக்கா? வேலூர் சொமேட்டோ டெலிவரி பாய் மீது கொலைவெறி தாக்குதல்!

மனிதாபிமானம் இருக்கா? வேலூர் சொமேட்டோ டெலிவரி பாய் மீது கொலைவெறி தாக்குதல்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 28, 2023 09:45 AM IST

Vellore Zomato sales boy attacked: மது போதை ஆசாமிகள் சொமேட்டோ டெலிவரி இளைஞரை கடுமையாக தாக்கியதில் உயிரிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை

கோப்புபடம்
கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூரைச் சேர்ந்த பழனி என்பரின் இளைய மகன் திருமலை வாசன். இவருக்கு வயது 22 . இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜியரின் படித்து வந்தார். திடீரென படிப்பை பாதியில் நிறுத்திய திருமலை வாசன் வேலூர் மாநகர் பகுதியில் சொமேட்டோவில் நிறுவனத்தின் உணவு டெலிவரி செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த ஜனவரி 26ம் தேதி இரவு காட்பாடி பகுதியில் காங்கேய நல்லூர் செல்லும் பகுதியில் உள்ள வெல்லக்கல்மேடு பகுதியில் தனக்கு வந்த ஆர்டருக்கான உணவை டெலிவரி செய்து விட்டு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாகச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், தணிகாச்சலம் என்ற இருவரும் திடீரென திருமலை வாசனை சரமாரியாக தாக்கினார். இதனால் திருமலை வாசன் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார் . இதையடுத்து திருமலை வாசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே திருமலைவாசன் கடுமையாக தாக்கப்பட்ட வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் மது போதை யில் ஆசாமிகள் உளருவதும், திருமலை வாசனை கடுமையாக தாக்கி விட்டு பின்னர் சாலையில் ஓரத்தில் போட்டு விட்டு செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளது.

இதையடுதது திருமலை வாசனை தாக்கிய பார்த்திபனை பிடித்து காட்பாடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பார்த்திபன் மற்றும் தணிகாச்சலம் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் திருமலை வாசன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதனால் அதனை தட்டிக்கேட்ட இளைஞர் திருமலை வாசனை பார்த்திபன் மற்றம் தணிகாச்சலம் கடுமையாக தாக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் திருமலை வாசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் சொமேட்டோ ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்