தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Crime: மனைவி கண்முன்னே கணவருக்கு நடந்த கொடூரம்; ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு!

Crime: மனைவி கண்முன்னே கணவருக்கு நடந்த கொடூரம்; ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு!

Karthikeyan S HT Tamil
Aug 04, 2023 11:02 AM IST

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இளைஞர் சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீவைகுண்டம் காவல்நிலையம்
ஸ்ரீவைகுண்டம் காவல்நிலையம்

ட்ரெண்டிங் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் சுடலை கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி (31). இவருக்கு திருமணமான நிலையில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மாயாண்டி மீது செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் ஆடு திருட்டு, மணல் திருட்டு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இதனிடையே, கால்வாய் மெயின்ரோடு தெருவைச் சேர்ந்தவர் சுடலைக்கண்ணு மகன் தேவகண்ணன் (39). இவர் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். மாயாண்டி வழக்குகளை தேவகண்ணன் நடத்தி வருகிறார். வழக்கு விசாரணைக்கு மாயாண்டி முறையாக வருவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தேவ கண்ணன் மாயாண்டியை கண்டித்துள்ளதாக தெரிகிறது. 

இந்த நிலையில் புதன்கிழமை மதியம் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக மாயாண்டி வருகை தந்துள்ளார். அப்போது வழக்கு தொடர்பாக பேசுகையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் மாலை 5 மணி அளவில் வீட்டில் தனது மனைவியிடன் மாயாண்டி இருந்துள்ளார். அப்போது திடீரென்று வீட்டிற்குள் புகுந்த ஒரு மர்ம கும்பல் மாயாண்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதை அவரது மனைவி செல்வி தடுத்துள்ளார். இருவருக்கும் வெட்டு விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த மாயாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செய்துங்கநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாயாண்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த செல்வியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கறிஞருடன் ஏற்பட்ட மோதலால் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்