Chennai Crime : மின்விசிறியை சரி செய்த போது நேர்ந்த சோகம்.. மின்சாரம் தாக்கி பெண் பலி!
சென்னையில் மின்விசிறியை சரிசெய்த போது மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொடுங்கையூர் சந்திரசேகர் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சர்வேஷ் (24). பெயிண்டரான இவர், காசிமேட்டைச் சேர்ந்த பவித்ரா (20) என்ற பெண்ணை காதலித்து, ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒருமாத பெண் குழந்தை உள்ளது. நேற்று பவித்ரா வீட்டில் தூங்க சென்றார். அப்போது மின் சிறியை(டேபிள் பேன்) ஆன் செய்து,காற்று நன்றாக வருவதற்கு அதனை சரி செய்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
அப்போது எதிர்பாராதவிதமாக பவித்ராவை மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். பின்னர் சர்வேஷ் மற்றும் உறவினர்கள் பரவித்ராவை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பவித்ரா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.பவித்ராவுக்கு திருமணம் ஆகி ஒரு வருடமே ஆவதால் இது பற்றி ஆர்.டி.ஓ. விசார ணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பிறகே பவித்ரா, மின்சாரம் தாக்கி இறந்தாரா? இல்லை வேறு ஏதும் காரணமா? என்பது தெரியவரும் என போலீ சார் தெரிவித்தனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்