என் கணவர் பல பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டுகிறார் - மனைவி பரபரப்பு புகார்!
Perambalur Crime: பெரம்பலூரில் வரதட்ணை கொடுமை புகாரில் ஒருவர் கைதாகியுள்ள நிலையில், தனது கணவர் பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து அதை வைத்து மிரட்டி பணம் பறித்ததாக மனைவியே புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், கோனேரிபாளையம் பாரதி நகரை சேர்ந்த குமார் என்பவரின் மகள் அகிலா(25). பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், எனக்கும் விமலுக்கும் (31) கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
ட்ரெண்டிங் செய்திகள்
விமல் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்துகிறார். மேலும் நான் கருப்பாக இருப்பதால், விமலுடன் தொடர்ந்து வாழ வேண்டும் என்றால் 50 சவரன் நகையும், பல லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என்று கணவரும், அவரது குடும்பத்தினரும் என்னை கொடுமைபடுத்துகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எனது கணவர் பல பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போல் அவரது செல்போனில் வீடியோ இருப்பதாகவும் அதை வைத்து அந்த பெண்களை மிரட்டி பணம் பறிப்பதாகவும் அகிலா புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விமல், அவரது தந்தை இளங்கோவன், தாய், சகோதரி, சகோதரியின் கணவர் ஆகிய 5 பேர் மீதும் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட சட்டங்களின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விமலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இளம்பெண் அகிலா கணவர் மீது குற்றம்சாட்டியது குறித்தும் பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்