Weather Update: அச்சச்சோ.. அடுத்த 5 நாட்களுக்கு கஷ்டம் தான்.. வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தகவல்!
Weather Update: தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதன்படி மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்
Weather Update: தமிழ்நாட்டில் கடந்த 20 முதல் 22ம் தேதி வரை சில பகுதிகளில் கோடை மழை பெய்தது; அதன் பின்னர் மீண்டும் கோடை வெப்பம் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் வரும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
தமிழகத்தில் இன்று வரை அதிக கடும் வெயில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
இன்று முதல் மார்ச் 30ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் வரும் 31 மற்றும் ஏப்ரல் 1ம் தேதிகளில் தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இன்று முதல் 30ம் தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும். அதே சமயம் அடுத்த ஐந்து தினங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக வெப்பம் அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஒரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
8 மாவட்டகள்
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதன்படி மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்ற வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. எட்டு மாவட்டங்களில் காலை 11 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள்:-
தண்ணீர்
தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.
வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லவும்.
தண்ணீர், எலுமிச்சை சாறு, தேன், இஞ்சி போன்றவை சேர்த்து பானங்கள் தயாரிக்கவும்.
உணவு
லேசான மற்றும் ஜீரணிக்க எளிதான உணவுகளை சாப்பிடவும்.
தர்பூசணி, வெள்ளரி, முலாம்பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், சாலட் போன்றவை அதிகம் சாப்பிடவும்.
வறுத்த உணவுகள், அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு உள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.
ஆடை
வெளிர் நிற, இலகுவான பருத்தி ஆடைகளை அணியவும்.
தொப்பி, கண்ணாடி போன்றவை அணிந்து சூரிய ஒளியில் இருந்து தற்காத்துக் கொள்ளவும்.
வெயில் நேரத்தில் வெளியே செல்லும் நேரத்தை குறைக்கவும்.
சூரிய ஒளி அதிகம் இருக்கும் நேரத்தில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், நிழலில் நடக்கவும்.
தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிக்கவும்.
வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை சிறப்பு கவனத்தில் கொள்ளவும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்