தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Senthil Balaji: இன்னும் 20 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை! காவிரி மருத்துவமனை தகவல்!

Senthil Balaji: இன்னும் 20 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை! காவிரி மருத்துவமனை தகவல்!

Kathiravan V HT Tamil
Jun 26, 2023 11:59 AM IST

பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்கள் ஒருவாரத்திற்கு பின்னர் தானாக எழுந்து நடப்பது வழக்கமாக உள்ளது. இதனால் செந்தில் பாலாஜி தானாக எழுந்து நடக்கும் வரை மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை .
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை .

ட்ரெண்டிங் செய்திகள்

அமலாக்கத்துறை சோதனை

கடந்த ஜூன் 13ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூரில் உள்ள இல்லங்கள் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறைகளில் அமலாகத்துறையினர் தொடர் சோதனைகளை நடத்தினர். மேலும் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அவரது சகோதரர் அசோக்கின் வீடு, ராயனுரில் உள்ள கொங்கு மெஸ் உரிமையாளர் மணி என்பவரிடன் வீடு உட்பட 8 இடங்களில் சோதனை நடத்தினர்.

மருத்துவனையில் சிகிச்சை

அமலாகத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்த நிலையில் ஜூன் 14ஆம் தேதி அதிகாலையில் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.

பைபாஸ் அறுவை சிகிச்சை

செந்தில் பாலாஜிக்கு காலையில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவனை நிர்வாகமும், ஈ.எஸ்.ஐ மருத்துவமனை நிர்வாகமும் பரிந்துரை செய்திருந்தனர். பின்னர் காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.

20 நாட்கள் சிகிச்சை

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேலும் 20 நாட்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பின்னர் செந்தில் பாலாஜி தானாக எழுந்து நடக்கத் தொடங்க்கவில்லை என்பதால் அவருக்கு நடைப்பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், திட உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்கள் ஒருவாரத்திற்கு பின்னர் தானாக எழுந்து நடப்பது வழக்கமாக உள்ளது. இதனால் செந்தில் பாலாஜி தானாக எழுந்து நடக்கும் வரை மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்