கதவை தட்டும் சத்தம்.. திறந்த உடன் சரமாரி வெட்டு.. வியாபாரி ரத்த வெள்ளத்தில் பலி!
Dindigul Murder : திண்டுக்கல்லில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முறுக்கு வியாபாரி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் : செல்லாண்டியம்மன் கோவில் நாராயண பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்த முருக்கு வியாபாரி அப்துல்லத்தீப் (வயது 47). இவரது மனைவி நிஷா மகன் சாகுல் ஹமீதுதௌபிக் (வயது 17). இவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது இன்று 02.04.23 அதிகாலை கதவை தட்டும் சத்தம் கேட்டு லத்திப் கதவை திறந்து உள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
அப்பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நபர்கள் வீடு புகுந்து பயங்கர ஆயுதங்களால் லத்திப்பை வெட்டி படுகொலை செய்தனர். இதனை தடுக்கச் சென்ற மகன் தௌபிக்கையும் வெட்டி விட்டு தப்பி சென்றனர் படுகாயம் அடைந்த தௌபிக் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் தொழில் போட்டி காரணமா அல்லது முன் பகை காரணமாக இந்த படுகொலை நடந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்