தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Accident: சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து 2 பேர் பலி; 40 பேர் காயம்

Accident: சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து 2 பேர் பலி; 40 பேர் காயம்

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 02, 2023 08:16 AM IST

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்கு காரணம் என்ற முதல் கட்ட தகவல்கள் தெரியவந்துள்ளது.

விபத்து
விபத்து

ட்ரெண்டிங் செய்திகள்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த கீழையூர் அருகே கேரளாவில் இருந்து வந்த சுற்றுலா பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த  2 பேர் பலியாகி உள்ளனர். 

மேலும் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மீட்பு பணிகளை கவனித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்கு காரணம் என முதல் கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்