தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Nagai Murder : கள்ளக்காதல்.. 40 வயது மதிக்கதக்க பெண்ணை காரை ஏற்றி கொன்ற இளைஞர்.. விசாரணையில் பகீர் தகவல்!

Nagai Murder : கள்ளக்காதல்.. 40 வயது மதிக்கதக்க பெண்ணை காரை ஏற்றி கொன்ற இளைஞர்.. விசாரணையில் பகீர் தகவல்!

Divya Sekar HT Tamil
Jun 24, 2023 11:52 AM IST

நாகை அருகே 40 வயது மதிக்கதக்க பெண்ணை காரை ஏற்றி கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைதான இளைஞர்
கைதான இளைஞர்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் மறுநாள் காலை புஷ்பவனம் கடற்கரையில் தலையில் காயத்துடன் துர்காதேவியின் உடல் கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேதாரண்யம் போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் சிதம்பரவீரன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தியின் மனைவி துர்கா தேவி எனப்து தெரியவந்தது.

பின்னர் போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் போலீசார் துர்காதேவி கொலை செய்யப்பட்டாரா? அல்லது விபத்தில் இறந்தாரா? என விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது துர்காதேவியுடன் புஷ்பவனத்தை சேர்ந்த அருண் (20) என்ற இளைஞர் பேசி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் அருணை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், அருண் சேலம் தனியார் மருத்துவ கல்லூரியில் மூன்றாமாண்டு மயக்கவியல் படித்து வருவது தெரியவந்தது. மேலும் அருண் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இருந்து மளிகை பொருட்கள் வாங்கி வந்து வேதாரண்யம் பகுதியில் வாட்ஸ் அப் மூலம் விளம்பரப்படுத்தி விற்பனை செய்து வந்துள்ளார்.

அருண், மளிகை பொருட்கள் விற்கும்போது கடந்த மே மாதம் துர்காதேவியுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது நாளடைவில் தகாத உறவாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். அவ்வப்போது அருண் துர்காதேவிக்கு பணம் கொடுத்து வந்திருக்கிறார். சமீபத்தில் அருண் பிறந்த நாளன்று இருவரும் தனிமையில் இருந்தபின் துர்காதேவிக்கு ஒன்றரை சவரன் நகை அருண் பரிசாக அளித்திருக்கிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று புஷ்பவனம் கடற்கரையில் துர்காதேவியுடன் மாணவர் அருண் தனிமையில் இருந்திருக்கிறார். அப்போது துர்காதேவி, அருணுக்கும் பணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது. துர்காதேவி ஒரு லட்சம் பணம் கேட்டிருக்கிறார். அதற்கு என்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது துர்காதேவி பணம் தராவிட்டால் கள்ளகாதக் உறவை வெளியே சொல்லி விடுவேன் என மிரட்டியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அருண், துர்காதேவி மீது காரை ஏற்றி கொன்றுள்ளார். அதுவும் மூன்று முறை தொடர்ந்து காரை ஏற்றியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அருணை கைது செய்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்