Cuddalore Murder : உடலுறவின் போது டார்ச்சர் செய்த கணவர்.. நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்துகட்டிய மனைவி!
கடலூரில் உடலுறவின் போது கொடுமை செய்ததாக கணவரை நண்பர்களுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே புற்றுகோவில் என்ற பகுதி உள்ளது. கரும்புத் தோட்டம் நிறைந்த அந்த பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் சம்பவ அறிந்து விரைந்து வந்த குள்ளஞ்சாவடி போலீசார், அந்த சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், உயிரிழந்த நபர் வடலூர் பார்வதிபுரம் ஊரை சேர்ந்தவர் ராஜசேகர் என்பது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து ராஜசேகரின் மனைவி மஞ்சுளாவை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில், ராஜசேகருக்கும் மஞ்சுளாவிற்கும் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளதாகவும், வீட்டை கவனிக்காமல் ராஜசேகர் திருப்பூரைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாகவும் கூறியுள்ளார். அது மட்டுமின்றி ராஜசேகர் நாள்தோறும் குடித்து விட்டு வந்து மஞ்சுளாவை உடலுறவின் போது கொடுமை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த மஞ்சுளா தனது பிரச்சனை குறித்து கடலூர் முதுநகர் அடுத்த தொண்டமநத்தம் ஊரை சேர்ந்த நெருங்கிய தோழி வினோதினியிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இருவரும் சேர்ந்து ராஜசேகரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர்.
அதற்காக வினோதினி வீட்டில் விருந்துக்கு அழைத்ததாக கூறி ராஜசேகரை அங்கு அழைத்துச்சென்ற மஞ்சுளா வினோதினியின் கணவர் சசிகுமார் மற்றும் அவரது நண்பர் மோகன் உதவியுடன் மதுபானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார்.
அதனை தொடர்ந்து அவரின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த திட்டமிட்ட மஞ்சுளா மற்றும் வினோதினி குடும்பத்தினர் புற்றுகோவில் அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் சடலத்தை வீசிச்சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து குற்றவாளிகள் நான்கு பேரையும் கைது செய்த போலீஸார் அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்