Crime : பகீர்! மனைவியை ஓட ஓட விரட்டி வெட்டிய கணவர்.. அதுவும் மருத்துவமனை வளாகத்தில்!
பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த மனைவியை கணவன் அரிவாளால் சரமாரியாக ஓட ஓட விரட்டி வெட்டியதில் படுகாயம் அடைந்த மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வி.கே மில் பகுதியை சேர்ந்தவர் மணி இவருடைய மனைவி பிரியதர்ஷினி. இருவருக்கும் இடையே ஏற்கனவே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கணவன் தாக்கியதாக கூறி மனைவி பிரியதர்சினி பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று காலை வந்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மனைவியை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் படுகாயம் அடைந்த மனைவி பிரியதர்ஷினி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைக் கண்ட நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதனால் பழனி அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மனைவியை வெட்டிய போது மணியனின் தலையிலும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அரசு மருத்துவமனை ஊழியர்கள் படுகாயமடைந்த கற்பகபிரியாவை மீட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கால்களில் மட்டும் வெட்டியதால் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தப்பி ஓட முயன்ற கணவர் மணியை அரசு மருத்துவமனை பாதுகாவலர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் அறிந்து வந்த பழனி நகர போலீசார் கணவன் மணியனை கைது செய்து சிகிச்சை அளித்து விசாரணை நடத்த வருகின்றனர். பழனி அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் முன்னிலையில் மனைவியை ஓட ஓட விரட்டி கணவனே வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பழனி நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்