Gun Shoot: வீட்டை பிரித்து கொள்வதில் மோதல்-அண்ணை சுட்டுக் கொலை செய்த தம்பி!
Thirukalukundram: வெங்கடேசனின் தலை மற்றும் மார்பு பகுதியில் குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
திருக்கழுக்குன்றம் அருகே வீட்டை பிரித்து கொள்வதில் நரிக்குறவ சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அண்ணனை நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் கிராமம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள நரிக்குறவர் பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் தொண்டு நிறுவனம் கட்டி கொடுத்த ஒரு வீட்டில் சகோதரர்களான வெங்கடேசன் (வயது 30), சந்திரன் (27) இருவரும் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே வீட்டில் வசித்து வந்த அண்ணன் தம்பி இடையே வீட்டை பிரித்து கொள்வதில் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் இருந்த சந்திரன், தூங்கி கொண்டிருந்த வெங்கடசேனை எழுப்பி எனக்குதான் இந்த வீடு சொந்தம் என்று கூறி தகராறில் ஈடுபட்டார்.
அப்போது வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இதையடுத்து தூங்கி கொண்டிருந்த வெங்டேசனை எழுப்பி சந்திரன் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரம் அடைந் சந்திரன் நாட்டு துப்பாக்கியை எடுத்து வெங்கடேசனை குறி வைத்து சுட்டார். இதில் வெங்கடேசனின் தலை மற்றும் மார்பு பகுதியில் குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருக்கழுக்குன்றம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சந்திரனை கைது செய்தனர். வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சந்திரன் வீட்டின் பின்புறம் உள்ள புதர்கள், செடி கொடிகள் உள்ள இடங்களுக்கு 1 கிலோமீட்டர் தூரத்திற்கு மேலாக போலீசாரை தன்னுடன் நடக்க வைத்து ஏமாற்றினார். போலீசார் அவருடன் 3 மணி நேரத்திற்கும் மேலாக அலைந்து திரிந்த நிலையில் சந்திரன் தனது பக்கத்து வீட்டு அலமாரியில் நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த தகவலை போலீசாரிடம் தெரிவித்தார். துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் நாட்டு துப்பாக்கியுடன் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்