தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘செந்தில் பாலாஜியால் அமைச்சர்கள் தூக்கமில்லாமல் தவிக்கிறார்கள்’- செல்லூர் ராஜூ

‘செந்தில் பாலாஜியால் அமைச்சர்கள் தூக்கமில்லாமல் தவிக்கிறார்கள்’- செல்லூர் ராஜூ

Karthikeyan S HT Tamil
Aug 08, 2023 11:46 AM IST

செந்தில் பாலாஜியால் மற்ற அமைச்சர்களும் தூக்கம் இல்லாமல் தவித்து வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில், மதுரையில் நடைபெற உள்ள மாநாடு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாடு தொடர்பாக அழைப்பிதழ் வழங்கும் பணி தொடங்கி இருக்கிறது. அந்த அழைப்பிதழை மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தெற்கு வாசல் மசூதி மற்றும் தேவாலயத்தில் வைத்து சிறப்பு பிரார்த்தனை செய்தோம். ஒரு மாற்றத்தை தரக்கூடிய மாநாடாக மதுரை அதிமுக மாநாடு டிஜிட்டல் மயத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டுக்கு வருகை தருபவர்களுக்கு 10 ஆயிரம் சமையல் கலைஞர்கள் மூலம் அறுசுவை உணவு வழங்கப்பட இருக்கிறது." என்று தெரிவித்தார்.

அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, அமைச்சர் செந்தில் பாலாஜியால் அனைத்து அமைச்சர்களுக்கும் தூக்கம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். செந்தில் பாலாஜி வாயை திறந்தால் யார் யார் உள்ளே போக போகிறார்கள் என தெரியவில்லை. தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து குறித்து எனக்கு எந்தவொரு கவலையுமில்லை. குதிரைக்கு கடிவாளம் போட்டது போல நாங்கள் மாநாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளோம். ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 10ம் தேதி ரிலீஸ், அதிமுக மாநாட்டின் மெயின் பிக்சர் 20ம் தேதி நடைபெறுகிறது." என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்