School Student Dies : மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் சாவு
School Student Dies : ஆவடி அருகே மின்சாரம் தாக்கியதில் 10ம் வகுப்பு மாணவர் பலியானார்.
ஆவடியை அடுத்த பாலவேடு ஆஞ்சநேயர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். வெல்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு அபிநயா (15) என்ற மகள் உள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இவர்களுக்கு கோபி (17) என்ற மகனும் இருந்தார். அவர், பாலவேடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு, அதன் முடிவுக்காக காத்திருந்தார்.
இந்நிலையில், குணசேகரன் தனது மனைவி மற்றும் மகளுடன் மாதவரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். வீட்டில் கோபியும், அவருடைய பாட்டி முருகம்மாள் மட்டும் இருந்தனர்.
வீட்டின் வெளியே உள்ள குளியல் அறையில் குளிக்கச்சென்ற கோபி, சுவரில் இருந்த மின்சார வயரில் கை வைத்தபோது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் அவரது பின்னந்தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார்.
நீண்டநேரம் ஆகியும் குளியல் அறையில் இருந்து பேரன் வராததால் முருகம்மாள் அங்கு சென்று பார்த்தார். அப்போது ரத்த வெள்ளத்தில் கோபி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கோபியை அருகில் இருந்த மருத்துவமனைக்கு உடனடியாக தூக்கிச்சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கோபி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.