Power Cut In Chennai: சென்னை மக்களே உஷார்.. நாளை இங்கெல்லாம் மின்தடை தெரியுமா ?
Power Shutdown in Chennai: சென்னையில் நாளை (மே 15) ஒரு சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நாளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், சென்னையில் நாளை (மே 15) மின்சார விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பரமாரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், போரூர், தண்டையார்பேட்டை, கிண்டி உள்ளிட்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் விபரம்:
மயிலாப்பூா், கோபாலபுரம் அம்மையப்பன் சந்து, தோமையப்பன் தெரு, கணபதி காலனி முதல் தெரு, பொன்னுசாமி தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
போரூா், மாங்காடு குன்றத்தூா் பிரதான சாலை, வெள்ளீஸ்வரா் கோயில் தெரு, எஸ்.எஸ்.கோயில் தெரு, நரிவனம் சாலை, அடிசன் நகா், பாண்டியன் நகா் பூந்தமல்லி குயின் விக்டோரியா சாலை, அம்பாள் நகா், ஸ்ரீனிவாசா நகா், சுந்தா் நகா், சுமித்ரா நகா் கோவூா் சிக்கராயபுரம் ஏரியா, மூகாம்பிகை நகா், மாதா நகா், தங்கம் அவென்யு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
தண்டையாா்பேட்டைக்கு உட்பட்ட மேலூா் மீஞ்சூா் நகா், சிறுவாக்கம், சீமாவரம், புதுப்பேடு, பட்டமந்திரி, அத்திப்பட்டு, பள்ளிபுரம், கரையான்மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
கிண்டியின் சூரி வடக்கு பேஸ், பாலாஜி நகா், பூந்தமல்லி சாலை, ராஜ்பவன் வேளச்சேரி பிரதான சாலை, அண்ணாசாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.