திடீரென மயங்கி விழுந்த SI.. ஆடிப்போன போலீஸ் ஸ்டேஷன் - கன்னியாகுமரியில் பரபரப்பு!
Police SSI: காவல் நிலையத்தில் மயங்கி விழுந்து போலீஸ் அதிகாரி மரணம் அடைந்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாற்றில் பணியில் இருந்த போக்குவரத்து எஸ்.எஸ்.ஐ., திடீரென மயங்கி விழுந்து உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டம், தெக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராஜரத்தின லிங்கம்(57). இவர் கோட்டாறு போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். ராஜரத்தின லிங்கம் நேற்று மாலை வழக்கம் போல் செட்டிக்குளம் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி கொண்டிருந்தார். பின்னர் சிறிது நேரம் ஓய்வுக்காக காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு சிறுநீர் கழிக்க கழிவறைக்குச் சென்ற நிலையில் நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த சக காவலர்கள் போய் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அப்போது ராஜரத்தினலிங்கம் கழிப்பறையில் மயங்கிக் கிடந்துள்ளார். உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் மாரடைப்பில் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து எஸ்எஸ்ஐ ராஜரத்தின லிங்கத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பணியில் இருந்த போது எஸ்எஸ்ஐ உயிரிழந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்