Chennai: இந்தோனேசியாவில் பயங்கரம்.. தேனிலவில் சென்னை டாக்டர் ஜோடி பலியான சோகம்!
இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சுற்றுலா சென்ற சென்னையைச் சேர்ந்த புதுமணத் தம்பதி, படகில் பயணம் செய்தபோது படகு கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு இன்பச் சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த புதுமண தம்பதி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
சென்னை பூவிருந்தவல்லியை அடுத்த சென்னீர் குப்பத்தைச் சேர்ந்தர் செல்வம் மகள் விபூஷ்னி. மருத்துவரான இவருக்கும் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் லோகேஷ்வரனுக்கும் கடந்த ஜூன் 1 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு இருவரும் தேனிலவுக்கு இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவிற்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளனர்.
இந்நிலையில் பாலி தீவில் விரைவு மோட்டார் படகில் இருவரும் சென்றபோது போட்டோஷூட் நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு, படகு கவிழ்ந்ததில் இருவரும் நீரில் மூழ்கினர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் தம்பதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், லோகேஸ்வரன் சடலமாக மட்டுமே மீட்கப்பட்டுள்ளார். விபூஷ்னியாவின் உடலை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இந்திய, தமிழக அரசு மற்றும் அவர்களது குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இருவரது சடலங்களை இந்தியாவுக்கு எடுத்து வருவது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காதலித்துப் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையைத் தொடங்கிய ஒரு வாரத்தில் இருவரும் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் மணமக்கள் குடும்பத்தினர், உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.